சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீனாவிற்கு பதிலடி: இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா – ஆஸ்திரேலியா ராணுவக் கூட்டாண்மை விரிவாக்கம்

  • September 3, 2026
  • 0 Comments

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், “ஆஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். […]

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

  • September 3, 2026
  • 0 Comments

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். தெற்கு ஈரானின் சிரிக் நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

22 இற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

  • September 3, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “நாம் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிக்கவில்லை. 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவே எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். ஆளுங்கட்சியிடம் 159 பாராளுமன்ற […]

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை இலங்கை செய்தி

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் இலங்கை

  • September 3, 2026
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கனடாவின் விக்டோரியா நகரில் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது, ​​பேரிடர் மீட்பு, உள்கட்டமைப்பு […]

உக்ரைன், ஜெர்மனியுடன் இணைந்து ட்ரோன் உற்பத்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்றை இறுதி செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜெர்மனியுடன் ட்ரோன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறது உக்ரைன்

  • September 2, 2026
  • 0 Comments

உக்ரைன், ஜெர்மனியுடன் இணைந்து ட்ரோன் உற்பத்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்றை இறுதி செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெர்மன் ஜனாதிபதி ப்ரீட்ரிச் மெர்ஸ் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல்வேறு வகையான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருட்களை இரு நாடுகளும் இணைந்து உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. “எங்கள் குழுக்கள் ஏற்கனவே ட்ரோன் ஒப்பந்தத்தின் […]

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் CEO ஆக ஜீதேந்திர மிஸ்ரா நியமனம்

  • September 2, 2026
  • 0 Comments

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முழு நேர தலைமை செயல் […]

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. இலங்கை செய்தி

22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?

  • September 2, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் 50 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக 22 இற்கு எதிராகவே அதிக மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் […]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 56,000 மாணவர்கள் சிறந்த பெறுபேறு

  • September 2, 2026
  • 0 Comments

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர். அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். பகுதி ஒன்றில் 35 புள்ளிகள், பகுதி இரண்டில் 35 புள்ளிகள் என 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்து சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 287 ஆகும். இது 73.58 சதவீதமாகும். சிங்கள மொழியில் குருணாகலை மாவட்டத்தை சேர்ந்த மாணவரொருவர் […]

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் உடனடி தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

வட மாகாண சுகாதாரத் துறை நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு

  • September 2, 2026
  • 0 Comments

வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் உடனடி தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இடம்பெற்றது. வட மாகாணத்திலுள்ள பகுதி […]

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

  • September 2, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என்றும், இது எதிர்கால முன்னேற்றம் குறித்த கவலைகளை ஏற்படுத்துகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித […]