ஆஸ்திரேலியா செய்தி

மீண்டும் தீவிர அரசியலுக்குள் நுழைகிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott!

  • May 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், லிபரல் கட்சியின் புதிய தேசிய தலைவராக (federal president) Tony Abbott நியமிக்கப்படவுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் தீவிர செயற்பாட்டு அரசியலுக்குள் நுழையவுள்ளார். அடுத்த வாரம் மெல்போர்னில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய குழு கூட்டத்தில டோனி அபோட்டின் நியமனம் உறுதி செய்யப்படவுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் ஒரே வேட்பாளர் அவர் மட்டும்தான் என லிபரல் கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “அவர் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் அந்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப், லக்னோ அணிகள் இன்று மோதல்!

  • May 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 68வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ ஏற்கனவே பிளே ஆப் சுற்றை இழந்துவிட்டது. அதேவேளை, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை நீட்டிக்க இன்றைய கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளே […]

செய்தி விளையாட்டு

மண்கவ்வினாலும் முதலிடத்தை தக்கவைத்தது RCB!

  • May 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் Hyderabad அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. RCB அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது ஹைதராபாத். அணியின் ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 5 […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீள திறப்பு: நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை!

  • May 22, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் நேட்டோ கூட்டணிகளுடன், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக மேற்படி நீரிணையை திறப்பதற்கு ஈரான் மறுக்கும் பட்சத்தில், அதைச் சமாளிக்க மாற்றுத் திட்டம் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை பாதையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நடைபெற்று அமைதி பேச்சுவார்த்தைகளில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், […]

இலங்கை செய்தி

கிழக்கில் காணி பாதுகாப்புக்கு விசேட குழு நியமனம்!

  • May 22, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணிகளைக் கைப்பற்றுவதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார […]

இலங்கை செய்தி

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய உரை குறித்து சுமந்திரன் விளக்கம்

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என்றும், அரசு முன்னெடுக்கும் சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, தவறுகளைச் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்காது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை குறித்துச் சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதி அநுரகுமார […]

இலங்கை செய்தி

வலி. வடக்கில் ஐந்தாவது வாரமாக வீதியில் இறங்கி போராடும் மக்கள்!

  • May 22, 2026
  • 0 Comments

யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் தங்களின் பூர்வீகக் காணிகளை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் , இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாக வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று […]

உலகம்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ரூபியோ : வரலாற்றில் இதுவே முதல் முறை!

  • May 22, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வரும்  23 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் படிப்படியான முன்னேற்றத்தைக் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணத்தின்போது, ​​அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், எரிசக்தி, வர்த்தகம் […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கைக்கு தொழில்நுட்பட ஒத்துழைப்பு வழங்க Commonwealth அமைப்பு பச்சைக்கொடி!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் Shirley Ayorkor Botchwey ஆகியோருக்கு இடையில் லண்டனில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலநிலை மாற்றம், ஜனநாயக நிர்வாகம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். காமன்வெல்த் அமைப்பின் மூலம் இலங்கைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதாக பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்தார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கல்வித்துறை அறிஞர்களுடன் பிரதமர் சந்திப்பு!

  • May 22, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், […]

error: Content is protected !!