ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு £78 பில்லியன் கடன் திட்டத்தில் இணைவது குறித்து பிரிட்டன் ஆலோசனை

  • May 4, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் சுமார் £78 பில்லியன் பவுண்ட் கடன் திட்டத்தில் இணைவது, ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் Starmer தெரிவித்துள்ளார். ஆர்மீனியாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளதார் அத்துடன் பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த உதவி திட்டம் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், பிரித்தானிய நிறுவனங்களுக்கு எதிர்கால ஒப்பந்த வாய்ப்புகளையும் வழங்கும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

  • May 3, 2026
  • 0 Comments

உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு நாளில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ஐந்து மாகாணங்களில், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் விமானப்படை தகவலின்படி, ஒரே இரவில் ரஷ்யா 269 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளது. அதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19 ட்ரோன் […]

உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 

  • May 3, 2026
  • 0 Comments

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி […]

ஐரோப்பா செய்தி

சமத்துவமின்மையை குறைப்பதே பசுமைக் கட்சியின் இலக்கு

  • May 3, 2026
  • 0 Comments

சமத்துவமின்மையை குறைப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுமே தங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள் என பசுமைக் கட்சி தலைவர் Zack Polanski தெரிவித்துள்ளது. சமத்துவமின்மை அனைத்தையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாகவே காலநிலை நெருக்கடியும் உருவாகிறது என கூறினார். மேலும் இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமின்றி, சமூக சமத்துவ பிரச்சினையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பசுமைக் கட்சியின் முன்னுரிமைகள் சுற்றுச்சூழலிலிருந்து சமூக சமத்துவத்துக்கு விரிவடைந்துள்ளதாகவும், இது கட்சியின் புதிய அரசியல் அணுகுமுறையை காட்டுவதாகவும் Zack Polanski கூறியுள்ளார். […]

செய்தி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு  

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதன்படி,மே மாதம் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக […]

இலங்கை செய்தி

3,000 பேரை சிக்கவைத்த இணைய மோசடி வலை – பொலிஸார் அவசர எச்சரிக்கை

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த மோசடியாளர்களின் முக்கிய இலக்கு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறானா மோசடிகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகளுக்காக குவிக்கப்பட்ட ஒரு இலட்சம் பொலிஸார்

  • May 3, 2026
  • 0 Comments

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த23 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில்,  வாக்கு எண்ணும் பணிகள் நாளை காலை ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, 234 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் காலை […]

ஐரோப்பா செய்தி

உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு – கருத்து கணிப்பில் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

  எதிர்வரும்வரும் வியாழக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என கருத்து கணிப்புகள்  தெரிவிக்கின்றன. பிரதமர் தலைமையிலான கட்சி, தற்போது வைத்திருக்கும் சுமார் 2,500 உள்ளாட்சி மன்ற இடங்களில் 2,000 வரை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் சுமார் 5,000 கவுன்சிலர் பதவிகளுக்கு 25,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், வாக்காளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான தெரிவு வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு முக்கிய கட்சிகளுக்கான […]

error: Content is protected !!