மீனவ பிரச்சினைக்கு விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் கோரிக்கை
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் தமது கடல் வளங்களை அழிப்பதுடன், கடற்றொழிலாளர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகளையும் சேதமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் வலியுறுத்தினார்.





