உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

ஐரோப்பா

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!

  • April 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர். ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. […]

இலங்கை

இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டு கண்காட்சி – லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பாடு!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் அழகை உலகிற்கு வெளிக்காட்டும்  புகைப்படக் கண்காட்சி,  அமெரிக்காவின்  லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஹாலிவுட்டில் உள்ள செலிபிரிட்டி சென்டர்  இன்டர்நேஷனலில் (Celebrity Centre International,Hollywood) நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், அமெரிக்காவின் இலங்கை புகைப்பட சங்கத்துடன் இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் தொடர்பான முறைப்பாட்டை புறக்கணித்த இங்கிலாந்து காவல்துறை – வழுக்கும் கண்டனம்!

  • April 24, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) லண்டனில் உள்ள கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியாவில் (Chelsea)  குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கு நான்கு பெண்களை தங்கவைத்திருந்ததாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததாகவும்,   பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் எப்ஸ்டீனைச் சந்திப்பதற்காக யூரோஸ்டார் ரயில் மூலம் அடிக்கடி பாரிஸுக்கு […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் உச்ச தலைவரின் உடல்நிலையில் பாதிப்பு -முழு அதிகாரமும் IRGCயின் வசம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) படுகாயமடைந்துள்ளதாகவும், மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு காலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை கையொன்றிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகம் மற்றும் உதட்டில் தீக்காயம் உள்ளதாகவும்  இதனால் பேசுவது கடினமாக உள்ளதாகவும் நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில்  கமெனி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதிகளுக்கு முக்கிய முடிவெடுக்கும் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா கப்பலை இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் – ஈரான் குற்றச்சாட்டு

  • April 24, 2026
  • 0 Comments

‘தௌஸ்கா’ என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்கா இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் என்று ஐ.நா-வில் உள்ள ஈரானின் தூதரகம், குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலின் பெயர் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைக்கு பதிலளிக்காததால் அந்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், ஈரானின் ஐ.நா தூதரகம் […]

ஐரோப்பா

யூத வெறுப்பு சம்பவம் : பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூத வெறுப்பு சம்பவத்துடன் தொடர்புடைய  48 வயதான ஷஃபிக் ரஹ்மானுக்கு தற்காலிகமாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான ஷஃபிக் ரஹ்மான் (Shafiq Rahman) தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை  ஜூலை 10 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார். அதுவரை அவரை தற்காலிக பிணையில் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார். ரஹ்மான், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​யூத-விரோத சொற்களை கூறி கத்தியதாகவும், […]

இலங்கை முக்கிய செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை  கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில்  […]

error: Content is protected !!