இலங்கை செய்தி

நேற்று தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது மீண்டும் தடம் புரண்டது

  • April 25, 2026
  • 0 Comments

‘சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை மார்க்கமான ரயில் பாதையின் ஒரு வழித்தடம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை தடம் புரண்டிருந்த […]

இலங்கை செய்தி

கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்

  • April 25, 2026
  • 0 Comments

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் […]

இலங்கை செய்தி

புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

  • April 25, 2026
  • 0 Comments

புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த […]

ஐரோப்பா செய்தி

அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர் – பெண் படுகொலை குற்றச்சாட்டில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

  • April 25, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரில் 27 வயது பெண் ஒருவரைக் கொலை செய்ததாக 18 வயதான என்சோ பெட்டாமியோ (Enzo Bettamio) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் துபாய் (Dubai) நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இங்கிலாந்து (United Kingdom) கொண்டு வரப்பட்டு, கமோனன் தியாம்பனிட் (Kamonon Thiambanith) என்பவரைக் கொலை செய்ததாக முறைப்படி குற்றம் சாட்டப்பட்டார். அந்தப் பெண் “ஏஞ்சலா” (Angela) என்றும் அழைக்கப்பட்டார். சனிக்கிழமை அவர் வெஸ்ட்மின்ஸ்டர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் உருவாக வாய்ப்பு

  • April 25, 2026
  • 0 Comments

ஜெர்மன் (Germany) நாட்டைச் சேர்ந்த எரிசக்தி நிறுவனமான E.ON, பிரித்தானியாவில் செயல்படும் தனது போட்டியாளர் ஓவோ எனர்ஜி (Ovo Energy) உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், பிரித்தானியாவில் 9.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய எரிசக்தி நிறுவனமொன்று உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் E.ON நிறுவனத்துக்கு சுமார் 5.7 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஓவோ எனர்ஜிக்கு சுமார் 4 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் […]

ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் சிறுவர்கள் உயிரிழந்த சோகம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • April 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேசன் தெரு (Mason Street) பகுதியில் நேற்றிரவு இரவு உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் (West Midlands Police), தீயணைப்பு சேவை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் […]

இலங்கை

சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று

  • April 25, 2026
  • 0 Comments

“ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான பிக்குகளின் பங்கேற்புடன், கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை ரஜமகா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

ஃபாக்லாந்து தீவு சர்ச்சை : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரித்தானியா அடிப்பணியுமா?

  • April 24, 2026
  • 0 Comments

ஃபாக்லாந்து ( Falkland Islands)  போன்ற ‘அரச ஆதிக்கப் பகுதிகளுக்கு’ அமெரிக்கா வழங்கும் தூதரக ஆதரவை ட்ரம்ப் நிர்வாகம் மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தொடர்பில் டவுனிங் தெரு எதிர்வினையாற்றியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் சேர மறுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக அமெரிக்காவின் ஆதரவு மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டவுனிங் தெரு, ‘ஈரான் போர் தொடர்பாக பிரிட்டன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படாது’ என்றும், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை […]

உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

error: Content is protected !!