உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு நாளில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ஐந்து மாகாணங்களில், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் விமானப்படை தகவலின்படி, ஒரே இரவில் ரஷ்யா 269 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளது. அதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 19 ட்ரோன் தாக்குதல்கள் நேரடியாக இலக்குகளைத் தாக்கியுள்ளன. மேலும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலும் பதிவாகியுள்ளது.
உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கூறுகையில், ரஷ்யாவின் துறைமுகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் எண்ணெய் கப்பல்கள் மற்றும்
இராணுவ கப்பல்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ரஷ்யா கூறுகையில், உக்ரைன் குறைந்தது 334 ட்ரோன்களை இயக்கியதாகவும், வடமேற்கு லெனின்கிராட் பகுதி அதிகமாக இலக்கு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.




