திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

  • June 27, 2026
  • 0 Comments

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

  • June 27, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் […]

"இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்" அரசியல் இலங்கை செய்தி

‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’

  • June 27, 2026
  • 0 Comments

“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். “இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்” எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “தேசிய மக்கள் சக்தி […]

34 ஆண்டுகள் 363 நாட்கள் வயதான டி புரூய்னே, உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். செய்தி விளையாட்டு

பெல்ஜியம் கோல் வேட்டை: வெளியேறியது நியூசிலாந்து

  • June 27, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Group G) பிரிவில் பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நிமிடங்களில் அடித்த ஹெடர் கோல் மூலம் பெல்ஜியம் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இத்தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வான்கூவரில் உள்ள BC Place Vancouver) மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டியின் 28-வது நிமிடத்தில், இடது […]

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.பாக்யராஜ். அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். செய்தி பொழுதுபோக்கு

திரைக்கதை மன்னரின் இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

  • June 27, 2026
  • 0 Comments

மறைந்த தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை […]

வார்' (VAR) தொழில்நுட்ப சோதனையில் அந்த கோல் Offside என நடுவரால் மறுக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

எகிப்து வரலாற்று சாதனை – ஈரானுக்கு ஏமாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

எகிப்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் எகிப்து அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ‘குரூப் G’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றில் (Round of 32) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள ஈரான் அணி அடுத்த […]

இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானிய புகலிடக் கொள்கையில் மாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புகலிடக் கொள்கையில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. கனடாவின் புகலிட முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள், பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் அகதிகளுக்குப் பொறுப்பேற்று (Sponsor) அழைத்து வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் […]

இந்த வாக்காளர் பட்டியல் சீரமைப்பில், வாக்காளர்கள் தங்களின் தகுதியை நிலைநாட்டுவதற்குக் குடியுரிமைக்கான சான்று உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா செய்தி

கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல – இந்திய அரசு விளக்கம்

  • June 27, 2026
  • 0 Comments

இந்தியக் கடவுச்சீட்டு என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அதனை ஒரு நபரின் குடியுரிமைக்கான தீர்க்கமான ஆதாரமாகக் கருதக் கூடாது என்றும் இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு சேவைகளின் விரிவாக்கம் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த ஆவணத்தின் சட்டபூர்வ வரம்பை விளக்கும் போது அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, கடவுச்சீட்டு […]

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, மத்திய கிழக்கில் நடந்த போரில் 20க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களும் தூதரகங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. செய்தி

ஈரான் தாக்குதலால் பெரும் சேதம்: அமெரிக்க எடுக்கும் மிக முக்கிய தீர்மானம்

  • June 27, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரில் பெரும் சேதமடைந்த மத்திய கிழக்கிலுள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேலுக்கு இடமாற்றம் செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஆளில்லா விமானங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளான மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், எதிர்பார்த்ததை விட அதிக சேதத்தைச் சந்தித்துள்ளன. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, மத்திய கிழக்கில் நடந்த போரில் 20க்கும் மேற்பட்ட இராணுவத் தளங்களும் தூதரகங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய […]

1979-ம் ஆண்டு 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். செய்தி பொழுதுபோக்கு

பிரபல இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

  • June 27, 2026
  • 0 Comments

பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். […]