நேட்டோ நாடுகளுக்கு வடகொரியா நேரடி எச்சரிக்கை
நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் நியாயமான இறையாண்மை உரிமைகளை நேட்டோ தலைவர்கள் ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வடகொரியாவின் உத்தியோகபூர்வ அரச ஊடகமான KCNA-வில் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்வதன் […]













