இலங்கை செய்தி

யாழ்.மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி. அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

யாழில் பொலிஸ் விசாரணைக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்டகாலமாக வீதி ஒழுங்கை (பாதை) தொடர்பான தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக சுரேஷ்குமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரும் […]

அரசியல் இலங்கை செய்தி

“ யாழ்ப்பாணம் வந்தால் சீமானை சுடுவேன்” – நாடாளுமன்றில் அர்ச்சுனா மிரட்டல்!

  • May 19, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம் வந்திருந்தால் சீமானை சுட்டு வீழ்த்தி இருப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் . நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அர்ச்சுனா எம்.பி. அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார். தமிழகம் சென்றிருந்தவேளைகூட சீமான்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் அவர் சீமான்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். “அண்ணன் சீமான், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சித்திருந்தார். நான் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டுக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க சஜித் அழைப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமதுரையில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , “யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட […]

இந்தியா இலங்கை செய்தி

SriLankan ஏர்லைன்ஸ் சென்னை அலுவலகத்தில் நிதி மோசடி!

  • May 19, 2026
  • 0 Comments

SriLankan Airlines நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள் சுமார் 2.2 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த இந்த பணியாளர்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் கையொப்பங்களை போலியாக மாற்றி நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக SriLankan Airlines நிறுவனம் இந்திய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இழந்த பணத்தை மீட்பதற்கான விசாரணைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகம் செய்தி

விட்டுக்கொடுக்க மறுக்கும் இரு துருவங்கள்: கைகூடுமா அமைதிப் பேச்சு?

  • May 19, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சிகள் கைகூடுமா என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகின்றது. அணுசக்தி செறிவூட்டல் மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பாரிய கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை மற்றும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற ஈரானின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுப்பதன் காரணமாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் தற்போது முட்டுக்கட்டையை எட்டியுள்ளன. ஈரான் […]

அரசியல் இலங்கை செய்தி

கிழக்கு பிரதேச செயலர் நியமனத்தில் ‘இனவாதம்’ – மகரூப் எம்.பி. குற்றச்சாட்டு!

  • May 19, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவது கவலையைத் தருகின்றது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , “கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட மாகாணமாகும். எனினும், தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை கிழக்குக்கு பிரதம செயலாளராக நியமிக்கும் மனநிலை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. கடந்த அரசாங்கங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமார் எம்.பியை விளாசித்தள்ளும் ராஜபக்சவின் சகா!

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ புலிகள் வசம் சிக்கி இருந்த 290,000 தமிழ் மக்களை இலங்கை ராணுவமே காப்பாற்றியது. மக்கள் நலன் கருதி கனரக ஆயுதங்களைக்கூட பயன்படுத்தவில்லை. இவ்வாறு மக்களை மீட்டு அவர்களை […]

இலங்கை செய்தி

“பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்”

  • May 19, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு விதியும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த பின்னரே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு சட்ட விளக்கம் அளித்துள்ளது. பிரதம நீதியரசர் பி. பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய […]

அரசியல் இலங்கை செய்தி

ஆளுங்கட்சி பக்கம் தாவுவாரா ஹர்ஷ டி சில்வா?

  • May 19, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது மூழ்கும் கப்பலாகும். அவ்வாறு மூழ்கும் கப்பலில் ஏறுவதற்கு நாம் தயாரில்லை. […]

error: Content is protected !!