பிரித்தானியர்கள் கடவுச்சீட்டுச் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல எடுக்கும் நேரம் மும்மடங்கு அதிகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை நிர்ணய முறை, மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பிரித்தானிய மக்கள் கடவுச்சீட்டுச் சோதனையைக் கடந்து செல்ல எடுக்கும் நேரத்தை ஏறக்குறைய மும்மடங்கு ஆக்கியுள்ளது.
ரோமில் உள்ள மத்திய விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதோடு, தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.
கோடைக்காலத்தில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கத் தயாராக இருக்குமாறு ரயன்ஏர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களில் தடைகள் நீடிப்பதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது, இருப்பினும் இந்த அமைப்பைச் செயல்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் சாராத குடிமக்களுக்கு டிஜிட்டல் நுழைவு வெளியேறுதல் அமைப்பு (EES) தேவைப்படுகிறது.
இந்த நடைமுறையின்படி, சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களுக்கு வரும்போது, தங்களின் கைரேகைகளையும் புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
அவர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, அனுமதி வழங்கப்படும்.
ஐரோப்பிய விமான நிலையங்களில் கடவுச்சீட்டுச் சரிபார்ப்புப் பகுதிகளில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டு வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரித்தானிய பயணிகள் கடவுச்சீட்டுச் சோதனைச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என ரயன்ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.





