ஐரோப்பா

பிரித்தானியாவில் ஒருவழிப் பேருந்துக் கட்டணம்  02 பவுண்ட்ஸாக நிர்ணயம்

ஜனவரி மாதம் முதல் இங்கிலாந்து முழுவதும் ஒருவழிப் பேருந்துக் கட்டணம்  02 பவுண்ட்ஸாக  நிர்ணயிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், மலிவு விலையில் போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதையும், மக்களுக்கு நிதி நிவாரணம் அளிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொத்த செலவு £500 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்போது £454 மில்லியன் நிதி ஆதரவு உள்ளது.

மீதமுள்ள நிதி போக்குவரத்துத் துறையின் தற்போதைய பேருந்து நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 03 பவுண்ட்ஸாக உள்ள ஒருவழிப் பேருந்துக் கட்டணம் வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்