நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: ஆளுங்கட்சிக்குள் குழப்பமா?
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து, மக்களை வழக்குச் சுமைகளில் இருந்து விடுவிப்பதே எமது பிரதான நோக்கமாகும். அண்மையில் நடைபெற்ற இரு தேர்தல்களின்போதும் இதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதன் […]













