ஐரோப்பா செய்தி

சியூட்டா புலம்பெயர்ந்தோர் மீது கலவரத் தடுப்பு பொலிஸார் தடியடி தாக்குதல்

  • September 18, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவின் சியூட்டா  பகுதியில் உள்ள கடற்கரைகளில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அப்புறப்படுத்தி, அவர்களில் சிலரை தற்காலிகக் குடியிருப்புகளுக்கு மாற்றும் நடவடிக்கையை ஸ்பெயின் கலவரத் தடுப்புப் பொலிஸார் இன்று முன்னெடுத்தனர். இதன்போது வானத்தை நோக்கி ரப்பர் குண்டுகளைச் சுட்டும், மக்கள் மீது தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய பிரதேசத்தில் 10,000 புலம்பெயர்ந்தோர் இன்னும் தங்கியிருப்பதாக ஸ்பெயின் மதிப்பிடுகிறது. சியூட்டா  பகுதியில் கடந்த ஜுலை மாதம் 72,000இற்கும் மேற்பட்டோர் அத்துமீறி குடியேறினர்.  இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் […]

ஐரோப்பா

சியூட்டாவை ஊடுருவிய குடியேறிகள் – உளவுத்துறையினரின் எச்சரிக்கைகள் புறக்கணிப்பு

  • September 10, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் குடியேறிகள் ஊடுருவ உள்ள விடயம் தொடர்பில் உளவுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் உளவுத்துறை மொராக்கோவின் உளவுத்துறையினருக்கும் மாட்ரிட் நகரில் உள்ள அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாக அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆவணங்களின்படி, மொராக்கோவின் வருடாந்திர ‘அரியணை ஏறிய நாள்’ (Throne Day) கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி, எல்லை வேலியின் மீது ஏறியோ அல்லது அதைச் சுற்றி நீந்தியோ சியூட்டாவுக்குள் நுழைய குடியேறிகள் சமூக ஊடகங்கள் […]

ஐரோப்பா

சியூட்டாவில் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு – அவசரமாகக் கூடும் அதிகாரிகள்

  • August 24, 2026
  • 0 Comments

சியூட்டாவில் Ceuta  இயல்பு நிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடி வருகின்ற நிலையில், ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sánchez தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நிலைமையை மதிப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியூட்டா மொரோக்கோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் காரணமாக  கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் முன்னதாக வந்திறங்கியவர்களின் எண்ணிக்கையை சுமார் 72,000 எனக் குறிப்பிட்டிருந்தது.   அவர்களில் சுமார் 70,000 பேர் மொராக்கோவிற்குத் […]

ஐரோப்பா

சியூட்டாவில் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்

  • August 5, 2026
  • 0 Comments

சியூட்டாவில் (Ceuta) கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறிய அப்பகுதிக்கான தலைவர் ஸ்பெயின் அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளார். சட்டவிரோதமாக செவுட்டாவிற்குள் நுழைந்த 72,000 குடியேறிகளில் 70,000 பேரை அண்டை நாடான மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது. ஆனால், அங்கு தங்கியுள்ள சுமார் 2,500 பேரில், நூற்றுக்கணக்கான துணையற்ற சிறார்களும் அடங்குவர். அவர்கள் உணவு, நீர், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள மோசமான சூழ்நிலைகளைச் சந்தித்து வருகின்றனர். சியூட்டாவின் தலைவர் […]