தென் சீனக் கடலில் பதற்றம் – சீன கப்பல் மீது மோதிய பிலிப்னைஸ் கப்பல்
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கக் கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படையின் கப்பலொன்று மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பலவான் மாகாணக் கடற்கரைக்கு அப்பால், இந்த சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் பிலிப்பைன்ஸ் கப்பல் சேதமடைந்தது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறைக்குச் சொந்தமான அந்தக் கப்பல், உள்ளூர் மீனவர்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மோதலுக்கு உள்ளானது.
சீனக் கப்பல் முதலில் பிலிப்பைன்ஸ் கப்பலின் பாதையை சுமார் 10 மீட்டர் தூரத்தில் கடந்து சென்றதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இருப்பினும், சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இந்த விபத்திற்கான பொறுப்பை பிலிப்பைன்ஸ் தரப்பின் மீது சுமத்தியுள்ளது.
சீனக் கடலோரக் காவல் படையிடமிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள் காட்டி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பிலிப்பைன்ஸ் கப்பல் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தன்னிச்சையாகத் தனது பாதையை மாற்றி, சீனக் கப்பலுக்கு முன்னால் வேகமாகச் செல்ல முயன்றதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார்.




