உலகம்

நேபாளத்தில் மின் உற்பத்தி திறன் சீர்குலைவு – கைக்கொடுக்கும் இந்தியா

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், அந்நாட்டின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தித் திறனை கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்நிலையில் நிவாரணம் அளிக்கும் விதமாக, டிசம்பர் 31 வரை நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்க இந்திய மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய நேபாளத்திற்கு 654 மெகாவாட் வரை மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு, டிசம்பர் மாதம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட இந்தக் கடுமையான வெள்ளத்தால், நேபாளம் மற்றும் திபெத்தியப் பகுதியில் கிட்டத்தட்ட 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேபாளத்தில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நீர்மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.

இன்னும் காணாமல் போனவர்களில் மின் நிலைய ஊழியர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்