சீனாவின் பெயர் மாற்ற முயற்சி முறியடிப்பு: 27 இடங்களுக்கு இந்திய வரைபடத்தில் அங்கீகாரம் இந்தியா செய்தி

சீனாவின் பெயர் மாற்ற முயற்சி முறியடிப்பு: 27 இடங்களுக்கு இந்திய வரைபடத்தில் அங்கீகாரம்

  • August 8, 2026
  • 0 Comments

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ‘ஜாங்னான்’ எனப் பெயரிட்டுச் சீனா உரிமை கோரி வரும் முயற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, அம்மாநிலத்தில் உள்ள லாங்ஜு, மாஜா, ஜஸ்வந்த் கர், புத்தமந்திர், கம்லாங் நகர் உள்ளிட்ட 27 முக்கிய இடங்கள் மற்றும் புவியியல் விவரங்களை ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முறையாகப் பதிவு […]

பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட்டில் கதவடைப்பு

  • August 8, 2026
  • 0 Comments

பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதுடெல்லியில் பத்திரிகையாளர்களிடையே ஹசீனா உரையாற்றிய நிகழ்வில் ஷாகிப் தொலைபேசி வாயிலாகப் […]

சீனாவின் சாத்தியமான தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தைவானின் வருடாந்திர 'ஹான் குவாங்' (Han Kuang) போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று அதிபர் லை சிங்-தே (Lai Ching-te) கடற்கரைப் பகுதித் தாக்குதல் பயிற்சிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலகம் செய்தி

சீனப் படையெடுப்பை முறியடிக்கத் தைவான் தீவிரப் பயிற்சி

  • August 8, 2026
  • 0 Comments

சீனாவின் சாத்தியமான தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தைவானின் வருடாந்திர ‘ஹான் குவாங்’ (Han Kuang) போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று அதிபர் லை சிங்-தே (Lai Ching-te) கடற்கரைப் பகுதித் தாக்குதல் பயிற்சிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேக தாக்குதல் ஏவுகணைப் படகில் (Fast attack missile boat) ஏறிய அதிபர், சீனாவின் படையெடுப்பை முறியடிப்பதைச் சித்தரிக்கும் வகையில் குறைந்த உயரத்தில் பறந்து தாக்கும் ட்ரோன்கள் (Drones) இயக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டார். […]

சுமார் 20 மாதங்களாகக் வெற்றிடமாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் பிராட்டின் (David Brat) நியமனத்தை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ட்ரம்பின் விசுவாசியை ஆஸ்திரேலியா தூதுவராக களமிறக்கும் அமெரிக்கா

  • August 8, 2026
  • 0 Comments

சுமார் 20 மாதங்களாகக் வெற்றிடமாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் பிராட்டின் (David Brat) நியமனத்தை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்ட நிலையில், 2024 நவம்பரில் அப்படவியிலிருந்து விலகிய கரோலின் கென்னடிக்கு (Caroline Kennedy) பதிலாக இவர் தற்போது பொறுப்பேற்கவுள்ளார். தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த பிராட், முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு […]

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரங்களின் பின்னணி என்ன? விசாரணை வேட்டை தீவிரம்

  • August 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பும், சட்டம் மற்றும் ஒழுங்கும் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் […]

தாய்லாந்து பேங்காக்கில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தும் 22 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில், தாய்லாந்து பிரதமர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொடூர சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்குகிறது தாய்லாந்து

  • August 8, 2026
  • 0 Comments

தாய்லாந்து பேங்காக்கில் சிறுவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தும் 22 பேர் காயமடைந்தும் உள்ள நிலையில், தாய்லாந்து பிரதமர் புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார். 14 வயதான அந்தச் சிறுவன், தான் வசித்து வந்த வீட்டில் வைத்து தனது தாத்தா பாட்டியைச் சுட்டுக் கொன்ற பிறகு, தான் கல்வி கற்ற நோந்தாபுரியில் உள்ள டெப்சிரின் (Debsirin) பாடசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு ஐந்து ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற பின்னர், […]

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அரசியல் இலங்கை செய்தி

இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?

  • August 8, 2026
  • 0 Comments

“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்ததாவது: “நாட்டில் மீண்டும் ஒரு […]

"இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

NPP அரசின் நேர்மையாலேயே வடக்கு மக்கள் மத்தியில் பேராதரவு

  • August 8, 2026
  • 0 Comments

“இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி, இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்தினார்கள். ஆனால், இனப்பிரச்சினை குறித்து நாம் […]

பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பைத் தராது என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார். செய்தி

துருக்கி, பாகிஸ்தானுடன் சவுதி ஒப்பந்தம்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

  • August 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பைத் தராது என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார். ரியாத் தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்படி மூன்று நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்ராஹிம் ரெஸாயி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான […]

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 7, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையில், இன்று 46 வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 7 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், […]