போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை உலகம் செய்தி

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பரபரப்பான அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையானது திடீரென ஆறு சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அரசுப் பத்திரங்களின் வருவாயும் (Government Bond Yields) அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழல் வெடித்துள்ளதால், […]

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது: இனி பேச்சு இல்லை- ட்ரம்ப் காட்டம்

  • July 8, 2026
  • 0 Comments

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே கையெழுத்திடப்பட்ட இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தமானது, நிரந்தர உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக 60 நாட்கள் அவகாசத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனினும், கடந்த வாரம் கட்டாரில் இரு நாடுகளுக்கும் […]

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா? அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேசம்வரை சென்றுவிட்டது. எனவே, முறையான விசாரணை இடம்பெறாவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகூட இல்லாமல்போகக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கூட்டு எதிரணிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு , “நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம். இப்படியான அரசியல் கலாசாரத்தையே தேசிய […]

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகள் மீண்டும் அமுல்

  • July 8, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இதற்கான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு […]

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. செய்தி விளையாட்டு

காலிறுதிக்குள் நுழைந்த அணிகள் எவை?

  • July 8, 2026
  • 0 Comments

  பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை […]

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

தொடரும் கைது வேட்டை – முன்னாள் அமைச்சரும் சிக்கினார்

  • July 8, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (08) காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கொள்முதல் நடைமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

"நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சியில் இப்படி நடந்திருக்கவே கூடாது: அமைச்சர் ஆதங்கம்

  • July 8, 2026
  • 0 Comments

“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு: “நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள […]

51 வயதான டெனிஸ் நடாலி மிக்லியோர் (Denise Nataly Migliore) என்ற பெண், தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் வாக்களிக்கப் பதிவு செய்வதற்காகப் பொய் வாக்குமூலம் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். உலகம் செய்தி

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாக்களித்த ஆஸ்திரேலிய பெண் கைது

  • July 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமுலாக்கப் பிரிவு (ICE) நடத்திய விசாரணையில், பல கூட்டாட்சித் தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான டெனிஸ் நடாலி மிக்லியோர் (Denise Nataly Migliore) என்ற பெண், தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தது மற்றும் வாக்களிக்கப் பதிவு செய்வதற்காகப் பொய் வாக்குமூலம் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த அக்டோபர் 2022 மற்றும் […]

செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். ஐரோப்பா செய்தி

நேட்டோவிலிருந்து வெளியேறுமா அமெரிக்கா?

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போர் மற்றும் கிரீன்லாந்து (Greenland) விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மீண்டும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேட்டோ ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யுமாறு ட்ரம்பை சமாதானப்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் முயன்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வருகை தந்த ட்ரம்ப், இம்மாநாட்டை நடத்துகின்ற துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான தனது நட்பு மட்டும் இல்லையென்றால், தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று கூறினார். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்துக்கு பின்னால் சூழ்ச்சி?

  • July 8, 2026
  • 0 Comments

அரசியல் தேவைக்காகவே அன்று சிறைச்சாலைக்குள் குட்டிமணி படுகொலை செய்யப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவத்திலும் அரசியல் பின்புலம் இருந்தது. எனினும், நீர்கொழும்பு சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியின் நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனவே, இச்சம்பவம் அதற்குப் பதிலடியாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் […]