IRGC அமைப்புக்கு எதிரான பிரித்தானியாவின் நடவடிக்கை – தெஹ்ரான் எச்சரிக்கை
சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் தாக்குதலுக்கு ஈரானின் மறைமுக ஆதரவு அல்லது தொடர்பு உள்ளதாக பிரித்தானியா குற்றம் சாட்டியதை தொடர்ந்து தெஹ்ரான் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பில் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதர் வரவழைக்கப்பட்டு கண்டனம் வெளியிடப்பட்டதாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு “பதிலடி கொடுக்கப்படாமல் போகாது” என்றும் தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை ஐ.ஆர்.ஜி.சி (IRGC) மற்றும் அதனுடன் தொடர்புடைய குழுக்களை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




