தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு
இலங்கையில் அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படவோ, எதுவும் நடக்கவோ இல்லை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளையின் 27/2 கீழ் வினாக்களை எழுப்புவதற்கு முன்னர், கறுப்பு ஜூலை கலவரம் குறித்துக் குறிப்பிட்ட சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
“இன்று கறுப்பு ஜூலை நினைவு தினமாகும். இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டிலே அரச பயங்கரவாதத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை; தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டே வருகின்றது. இந்த இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் இச்சபையில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றேன்”
எனக் குறிப்பிட்டுவிட்டுத் தனது நிலையியல் கட்டளை வினாக்களை சபையில் முன்வைத்தார்.




