இலங்கை செய்தி

வீழ்ச்சியை பதிவு செய்த பணவீக்கம்

  • December 22, 2025
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. இதற்கமைய ஒக்டோபர் மாதத்தில் 2.7 வீதமாக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 2.4 வீதமாக குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 4.1 வீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 3.6% ஆக குறைவடைந்துள்ளது. அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் 1.5 வீதமாக காணப்பட்ட உணவு அல்லா […]

உலகம் செய்தி

ஹொங்கொங்கில் 30 வினாடிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்!

  • December 22, 2025
  • 0 Comments

சீனாவின் ஹொங்கொங் நகரில் உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் 30 வினாடிகளில் 1 பில்லியன் யென் (£4.7 மில்லியன்) திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நூதன கொள்ளை சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை காலை 09 மணியளவில் நாணய பரிமாற்றம் செய்யும் வணிக நிறுவனத்திற்கு வெளியே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காரில் வருகை தந்த மூன்று பேர், மாட்டிறைச்சி வெட்டும் கத்தியை காண்பித்து […]

இந்தியா செய்தி

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். ‘‘இந்தியா – நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இது ஒரு முக்கிய தருணம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி ஒன்பது மாதங்களில் நிறைவடைந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை […]

அரசியல் இலங்கை செய்தி

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் வலியுறுத்து!

  • December 22, 2025
  • 0 Comments

” தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்று (22) விசேட கூற்றொன்றை விடுத்தே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு, “குமட்டல், வாந்தி மற்றும் தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போண்டி கடற்கரை தாக்குதல் – நீண்டகாலமாக திட்டமிட்ட தாக்குதல்தாரிகள் : புதிய ஆவணம் வெளியீடு!

  • December 22, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரிகள், “டென்னிஸ் பந்து குண்டு” மற்றும் பிற வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும், படுகொலைக்கு பல வாரங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், புதிய நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. நியூ சவுத் வேல்ஸின்  கிராமப்புறத்தில் நவீத் அக்ரம் “துப்பாக்கிப் பயிற்சி” நடத்தி அதை காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரியான நவீத் அக்ரம் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி ஊடாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  இதன்போதே புதிய […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]

இலங்கை செய்தி

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

  • December 22, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8 % வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 2025 நவம்பர் […]

உலகம் செய்தி

அதிகரிக்கும் மோதல் – சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகும் ஜப்பான்!

  • December 22, 2025
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் நகரம் (ski resort town) இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க தயாராகி வருகிறது. வடமேற்கு நாகானோ (Nagano) மாகாணத்தில் உள்ள ஹகுபா கிராமம் (Hakuba) மேற்படி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை வரும் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளுர் மக்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்ற […]

இலங்கை செய்தி

தரமற்ற பொருட்கள் மற்றும் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; யாழ். அரசாங்க அதிபர் எச்சரிக்கை

  • December 22, 2025
  • 0 Comments

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ள சுட்டுத் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு – ஜெனரல் ஒருவர் பலி!

  • December 22, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) இன்று கார் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) ரஷ்ய ஆயுதப்படைகளின் பயிற்சி இயக்குநரகத்தின் தலைவராக  பணியாற்றி வந்தவராவார். இந்த சம்பவம் இன்று காலை 07.00 மணியளவில் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. உக்ரைனிய உளவுத்துறைகள் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  ரஷ்ய புலனாய்வாளர்கள் இது  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.