அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!

  • December 23, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர். இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் புதிய சட்டம்: நீதி அமைச்சு கூறுவது என்ன?

  • December 23, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு நகல் தொடர்பில் மக்களின் கருத்துகளை பெற்ற பின்னரே சட்டமூலம் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டவரைவு நீதியமைச்சின் இணையத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி சட்டவரைவு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. தனிநபர்களும், அமைப்புகளும் எதிர்வரும் பெப்ரவரி 28 […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் நடப்பது வேறு: மஹிந்த அணி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக எழுந்து நிற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “யாழ்ப்பாணத்தில் இராணுவ வசம் இருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுவிட்டது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்ப முற்படக்கூடாது. சிங்கள, பௌத்த மக்கள் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக போராட்டம் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயம்

  • December 22, 2025
  • 0 Comments

தென்கிழக்கு பிரெஞ்சு(France) நகரமான லியோனுக்கு(Lyon) அருகிலுள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த நேரத்தில் உள்ளூர்வாசிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் நகர மேயர் தெரிவித்துள்ளார். “வெடிப்பின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஆலையை வைத்திருக்கும் நோர்வே(Norwey) ரசாயன நிறுவனமான எல்கெம்(Elkem) குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

பிரித்தானிய சிறைகளில் உண்ணாவிரதம் இருந்த இரண்டு பாலஸ்தீன போராளிகள் மருத்துவமனையில் அனுமதி

  • December 22, 2025
  • 0 Comments

குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பரின் கூற்றுப்படி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பாலஸ்தீன(Palestine) போராளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லண்டனில்(London) உள்ள பென்டன்வில்(Bentonville) சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 வயது கம்ரான் அகமது(Kamran Ahmed) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சகோதரி ஷாஹ்மினா ஆலம்(Shahmina Alam) அல் ஜசீராவிடம்(Al Jazeera) குறிப்பிட்டுள்ளார். சர்ரேயில்(Surrey) உள்ள பிரான்ஸ்ஃபீல்டில்(Bransfield) 50 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த 30 வயதான அமு கிப்(Amu Gibb) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனத்திற்கான கைதிகள் குழுவும் […]

உலகம் செய்தி

11 ஈக்வடார்(Ecuador) ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • December 22, 2025
  • 0 Comments

நாடு தழுவிய குற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குவாயாகில்(Guayaquil) நகரத்திலிருந்து நான்கு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து காணாமல் ஆக்கியதற்காக 11 ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஈக்வடார்(Ecuador) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன குழந்தைகள் மீதான ஒரு வருட விசாரணையை இந்த தண்டனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. குழந்தைகள் கடைசியாக டிசம்பர் 8, 2024 அன்று தங்கள் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தை நோக்கி நடந்து செல்லும்போது காணப்பட்டுள்ளனர். ஸ்டீவன் மெடினா(Steven Medina), நெஹேமியாஸ் […]

Uber robotaxi self-driving car in London streets அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் ஐரோப்பா

ஓட்டுநர் தேவையில்லை! – 2026-ல் லண்டனில் ஊபெர் ரோபோடாக்ஸி!

  • December 22, 2025
  • 0 Comments

ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய நிறுவனங்கள் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பைடு (Baidu) உடன் இணைந்து, வரும் 2026-ஆம் ஆண்டு லண்டன் வீதிகளில் ‘ரோபோடாக்ஸி’ (Robotaxi) எனப்படும் ஓட்டுநர் இல்லா வாடகைக் கார்களைச் சோதிக்கப் போவதாக இன்று (டிசம்பர் 22, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பைடு (Baidu)வின் ‘அப்பல்லோ கோ’ (Apollo Go) தானியங்கி வாகனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. […]