இந்தியா செய்தி

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

‘‘இந்தியா – நியூசிலாந்து உறவில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் இது ஒரு முக்கிய தருணம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கி ஒன்பது மாதங்களில் நிறைவடைந்திருப்பது ஒரு வரலாற்று மைல்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவான அரசியல் விருப்பம் இதில் பிரதிபலிப்பதாக தெரிவித்த மோடி மேம்பட்ட சந்தை அணுகல், ஆழமான தொடர் முதலீடுகள் ஆகியவற்றை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்கிறது எனவும் கூறியுள்ளார்.

இதனால், புதுமைகளைப் படைப்பவர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி