ஐரோப்பா செய்தி

போரில் முன்னேறி வரும் ரஷ்யா : கிழக்கு நகரை இழந்த உக்ரைன்!

  • December 24, 2025
  • 0 Comments

உக்ரைனுடனான போரில் ரஷ்யா முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு நகரமான சிவர்ஸ்கில் (Siversk) இருந்து உக்ரேனிய துருப்புக்கள் பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய இராணுவம், எங்கள் வீரர்களின் உயிரையும், பிரிவுகளின் போர் திறனையும் பாதுகாக்க” செயல்பட்டதாக கூறியுள்ளது. இதற்கிடையே உக்ரைன் வசம் எஞ்சியுள்ள  டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் அமையப் பெற்றுள்ள இரண்டு நகரங்களையும் ரஷ்ய படையினர் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் நெருங்கி வருகின்ற நிலையிலும் […]

இந்தியா செய்தி

அசுர பலத்தில் திமுக கூட்டணி; அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு

  • December 24, 2025
  • 0 Comments

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையிலான ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’, வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அக்கட்சியின் நிர்வாகிகள், இந்த ஆதரவு முடிவை அறிவித்தனர். தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பை, கடந்த […]

இந்தியா உலகம் செய்தி

ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக இணையம்; ‘ப்ளூ பேர்ட்’ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இஸ்ரோ

  • December 24, 2025
  • 0 Comments

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ப்ளூ பேர்ட் 6’ (BlueBird 6) ஐ ‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 8:55 மணிக்கு விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், சுமார் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைத் சுமந்து சென்றது. இதுவே இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். பூமியில் இருந்து 520 […]

உலகம் ஐரோப்பா செய்தி

இரு குழந்தைகளைக் கொன்று லண்டனுக்குத் தப்பிய தாய்; அமெரிக்காவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பியோடிய கிம்பர்லீ சிங்லர் என்ற பெண், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கொலராடோவில் உள்ள தனது வீட்டில் 9 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, லண்டனில் தலைமறைவாக இருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் கணவருடனான பிணக்கு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தாக்குதலில் அவரது மூத்த மகள் காயங்களுடன் […]

உலகம் செய்தி

பென்சில்வேனியாவில் கோர விபத்து: முதியோர் இல்லத்தில் வெடிப்பு மற்றும் தீயினால் இருவர் பலி

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். பிரிஸ்டல் நகரில் உள்ள ‘சில்வர் லேக்’ (Silver Lake) முதியோர் இல்லத்தில் நேற்று பிற்பகல் எரிவாயு கசிவு குறித்து அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் ஜன்னல்கள் மற்றும் மின்சார ஏணிகள் […]

உலகம் ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றிய முன்னாள் ஆணையர் உட்பட 5 பேருக்கு விசா தடை

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்க சமூக வலைதளங்களில் வலதுசாரி கருத்துக்களைத் தணிக்கை செய்யத் தூண்டியதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் ஆணையர் தியரி பிரெட்டன் (Thierry Breton) உள்ளிட்ட ஐந்து பேருக்கு அமெரிக்கா விசா தடை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பேச்சுரிமைக்கு எதிராக ‘தணிக்கை வேட்டையை’ நடத்தியதாக இவர்களைச் சாடியுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, இராஜதந்திர ரீதியிலான கடும் நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஐரோப்பாவின் டிஜிட்டல் சேவைச் சட்டத்தின் (DSA) பின்னணியில் இருந்த தியரி பிரெட்டன், எலான் மஸ்க்கின் […]

ஆஸ்திரேலியா உலகம் ஐரோப்பா செய்தி

யூதர்களுக்கு எதிரான வன்முறைத் தூண்டல்; ஆஸ்திரேலியாவில் பிரித்தானியர் கைது

  • December 24, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட நாசி (Nazi) சின்னங்களைக் காட்சிப்படுத்திய மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டிய குற்றச்சாட்டில், 43 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த இவர், சமூக வலைதளங்கள் வாயிலாக நாசி கொள்கைகளைப் பரப்பியதுடன், யூத சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாசி சின்னங்கள் பொறிக்கப்பட்ட வாள்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. “ஆஸ்திரேலியாவிற்கு விசா மூலம் வருபவர்கள் விருந்தினர்களே; இங்கு வெறுப்புணர்வை விதைப்பவர்களுக்கு […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானிய வரலாற்றில் மிக மோசமான தாக்குதல் முயற்சி முறியடிப்பு: ஐஎஸ் ஆதரவாளர்கள் இருவர் குற்றவாளிகள்

  • December 24, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கத் திட்டமிட்ட இரண்டு ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு ஜெப ஆலயத்தை இலக்கு வைத்து, தானியங்கி துப்பாக்கிகளால் பாரிய தாக்குதலை நடத்த 38 வயதான வாலித் சதௌய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் சதி செய்துள்ளனர். பிரித்தானிய வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாக அமையவிருந்த இந்தத் தாக்குதல் முயற்சி, பொலிஸாரின் புலனாய்வு விசாரணையால் முறியடிக்கப்பட்டது. மீண்டும் நாட்டில் […]

உலகம் செய்தி

மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி

  • December 24, 2025
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்று (24) இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவின் யெலெட்ஸ்காயா (Yeletskaya) வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை அவதானித்த போக்குவரத்து பொலிஸார், அவரை சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது அந்த நபர் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், அருகில் நின்றிருந்த மற்றொரு நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த […]

இலங்கை செய்தி

தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!

  • December 24, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 11 பொதிகளில் […]