உலகம் ஐரோப்பா செய்தி

இரு குழந்தைகளைக் கொன்று லண்டனுக்குத் தப்பிய தாய்; அமெரிக்காவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து

அமெரிக்காவில் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பியோடிய கிம்பர்லீ சிங்லர் என்ற பெண், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள மீண்டும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கொலராடோவில் உள்ள தனது வீட்டில் 9 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, லண்டனில் தலைமறைவாக இருந்தபோது இவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் கணவருடனான பிணக்கு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தாக்குதலில் அவரது மூத்த மகள் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஓராண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது கொலராடோ கொண்டுவரப்பட்டுள்ள கிம்பர்லீ மீது, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி