ஐரோப்பா செய்தி

ஹோவிஸ் – கிங்ஸ்மில் இணைப்பு: தீவிரமடையும் விசாரணை

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னணி ரொட்டி நிறுவனங்களான ஹோவிஸ் (Hovis) மற்றும் கிங்ஸ்மில் (Kingsmill) இடையிலான 75 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இணைப்பை, அந்நாட்டின் போட்டி ஆணையம் இன்று முதல் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த இணைப்பால் சந்தையில் போட்டி குறைந்து, ரொட்டியின் விலை அதிகரிக்கக்கூடும் என ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிங்ஸ்மில் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏபிஎஃப் (ABF) பங்குகள் இன்று காலை 11 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன. பிரைமார்க் (Primark) […]

ஐரோப்பா செய்தி

“ட்ரம்ப் யுகம்”: ஐரோப்பிய நாடுகளைச் சாடும் லார்ட் மண்டெல்சன்

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் லார்ட் மண்டெல்சன் (Lord Mandelson), கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரின் எதிர்வினையை “நாடகத்தனம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். “ட்ரம்ப் யுகத்தில்” வெறும் வார்த்தைகளால் மட்டும் முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், கடந்த பத்தாண்டுகளில் வழக்கமான இராஜதந்திரம் சாதிக்காததை ட்ரம்ப் ஒரே நாளில் சாதித்துக் காட்டியுள்ளதாகப் புகழ்ந்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் சர்வதேச விதிகளைப் […]

உலகம்

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்!

  • January 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் அல்பே (Albay) மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிமலையை அண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 3000 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாறைகள் அவ்வவ்போது விழுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலையின் பள்ளத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) சுற்றளவில் உள்ள 729 வீடுகளில் இருந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது ஊழல் நிதிப் புகார்

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ (Andrew) தனது சொகுசு பங்களாவை விற்றதில், பாரிய ஊழல் மற்றும் பண மோசடி நடந்திருக்கலாம் என பிபிசி புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கசாக்ஸ்தான் கோடீஸ்வரர் திமூர் குலிபாயேவ் (Timur Kulibayev) , இந்த சொத்தை வாங்குவதற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு, சந்தை விலையை விட 7 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு இந்த இல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை ‘கோரெட்டி’ (Goretti) புயல் தாக்கி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புயல் காரணமாக மிட்லாண்ட்ஸ் பகுதியில் சுமார் 30 சென்டிமீட்டர் வரை கனமான பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் காரணமாக சாலைப் போக்குவரத்து, இரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பர்மிங்காம், […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடே நம்பிக்கையில்லாப் பிரேரணை!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe இன்று (08) தெரிவித்தார். அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள எதிரணிகள், தமது அரசியல் இருப்புக்காகவே பிரேரணையை முன்வைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் நேற்று ஆரம்பமாகியது. இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் பிரேரணை கையளிக்கப்படும். இந்நிலையிலேயே […]

ஐரோப்பா செய்தி

இரண்டு குழந்தை நிதி உதவி தடையை நீக்கும் சட்டம்; பிரித்தானிய நிதி அமைச்சர்   இன்று தாக்கல்

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி மீதான தடையை நீக்கும் சட்டத்தை நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இந்தச் சலுகை ‘பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே’ வழங்கப்பட வேண்டும் என்று நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரேச்சல் ரீவ்ஸ், ஒரு குழந்தையின் தோல் நிறத்தைக் கொண்டு அவர்கள் வறுமையில் வாடலாமா வேண்டாமா என்பதைத் […]

இலங்கை

திருகோணமலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்!

  • January 8, 2026
  • 0 Comments

திருகோணமலை- கல்யாணபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்றிரவு (07) இடம்பெற்றுள்ளது. கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கல்யாணபுர பகுதியில் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார். இதனையடுத்து  கோமரங்கடவல  பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவும் வகையில் ChatGPT Health அறிமுகம்!

  • January 8, 2026
  • 0 Comments

பயனர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் வகையில் பாதுகாப்பாக ஒருங்கிணைக்கபட்ட  ChatGPT Health ஐ OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் Apple Health மற்றும் MyFitnessPal போன்ற பயன்பாடுகளிலிருந்து மருத்துவ பதிவுகள் மற்றும் ஆரோக்கியத் தரவைப் பாதுகாப்பாக இணைக்க அனுமதிக்கிறது. இதனால் மிகவும் பொருத்தமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார நுண்ணறிவுகளைப் பெறலாம். இந்த தளம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்துகிறது. 260 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட OpenAI, ChatGPT Health, தொழில்முறை மருத்துவ பராமரிப்பை மாற்றுவதற்குப் […]

ஐரோப்பா

“நிர்வாண புகைப்படங்கள் வெளியானால்” – தொழில்நுட்ப நிறுவனங்களை எச்சரிக்கும் பிரித்தானியா!

  • January 8, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்கள் ஊடாக பரப்பப்படும் நிர்வாண புகைப்படங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டவிதியொன்று பிரித்தானியாவில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சைபர்ஃப்ளாஷிங் (Cyberflashing )குற்றங்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய சட்டமானது இவ்வாறான குற்றங்களை தடுக்கும் அதிக பொறுப்பை  தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்குகிறது. புதிய சட்டத்திற்கு இணங்கத் தவறும் தளங்கள் கணிசமான அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். குறித்த நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் சுமார் […]