உலகம்

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்!

பிலிப்பைன்ஸின் அல்பே (Albay) மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிமலையை அண்டிய பகுதிகளில் வாழும் சுமார் 3000 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பாறைகள் அவ்வவ்போது விழுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிமலையின் பள்ளத்திலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) சுற்றளவில் உள்ள 729 வீடுகளில் இருந்து 2,800 க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நிரந்தர ஆபத்து மண்டலத்திற்கு வெளியே வசிக்கும் மேலும் 600 கிராமவாசிகள் எரிமலையிலிருந்து பாதுகாப்பாக இருக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் அவசரகால தங்குமிடங்களுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்