இலங்கை செய்தி

திருகோணமலையில் மீனவ குழுக்களிடையே மோதல்; களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை விஜிதபுர பகுதியில் தமிழ் – சிங்கள   மீனவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  பொலிஸ் அதிரடிப்படையின களமிறக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மோதல்  நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

செய்தி

பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

  • April 12, 2023
  • 0 Comments

னது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்களை சந்தித்தார். தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான […]

இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயன்று கடலில் தத்தளித்த 440 புகலிட கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

மோல்டாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் சீற்றத்தால்  நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் தலையீட்டுடன் இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மீன்பிடி படகில் ஏறி சுமார் நான்கு நாட்களாக புயல் சீற்றம் கொண்ட கடலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறுதி […]

இலங்கை செய்தி

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்!

  • April 12, 2023
  • 0 Comments

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தன. எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது. 2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் […]

இலங்கை செய்தி

பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்

  • April 12, 2023
  • 0 Comments

தமிழ்  – சிங்களப் புத்தாண்டு  காலத்தில் பொது மக்களுக்கு  பாதிப்பு  ஏற்படாதவாறு  வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட  ஆலோசகரும்  ஜனாதிபதி  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க  தெரிவித்தார். கொழும்புத்துறை  வியாபாரச்  சங்கம்  மற்றும்  நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன்  நேற்று  (06)   ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற  சந்திப்பொன்றின் போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு  தெரிவித்தார். இதன்போது   நடைபாதை வியாபாரிகளுடன்  சுமூகமாக கலந்துரையாடிய […]

இலங்கை செய்தி

அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார்

  • April 12, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளார் சனத் ஜெயந்த தலைமையிலான இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி சித்தி  மரீனா மொஹமட், திரு நரசிங்க ஹேரத் முதியன்சலாகே சித்ரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமரன் ,திரு. மானிக்க படதுருகே ரொஹன புஷ்பகுமார, கலாநிதி . அங்கம்பொதி தமித நந்தனி […]

இலங்கை செய்தி

தீவிர பாதுகாப்பில் இலங்கை – தயார் நிலையில் படையினர்

  • April 12, 2023
  • 0 Comments

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தை பொறுத்த வரையில் இரண்டு விடயங்களில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. முதலாவது ஈஸ்டர் வாரமாகும். இன்று புனித வெள்ளி தினமாகும். கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்கள் முக்கியமான நாட்களாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை […]

இலங்கை செய்தி

இலங்கையில் குறைந்த விலையில் தேனீர் வழங்கவில்லை என்றால் புகைப்படம் அனுப்புமாறு அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக  சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி 100 ரூபாவாக […]

இலங்கை செய்தி

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சி கொடுத்த முதியவர்

  • April 12, 2023
  • 0 Comments

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  […]

இலங்கை செய்தி

ரணில் ஜனாதிபதியானது ஏன்? – மஹிந்த வெளியிட்ட தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

“ராஜபக்சக்களைப் பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடமையைத் திறம்படச் செய்கின்றார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அதன் பெறுபேறாக சர்வதேச […]