இலங்கை செய்தி

தீவிர பாதுகாப்பில் இலங்கை – தயார் நிலையில் படையினர்

ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தை பொறுத்த வரையில் இரண்டு விடயங்களில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

முதலாவது ஈஸ்டர் வாரமாகும். இன்று புனித வெள்ளி தினமாகும். கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்கள் முக்கியமான நாட்களாகும்.

இதனால் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்தந்த தேவாலங்களில் போதகர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரை அழைக்கவும் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கான பாதுகாப்பு அமைச்சுடன் பாதுகாப்பு பிரிவு தலைமைகள் கலந்துரையாடல் மேற்கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விசேடமாக மேல் மாகாணத்தில் அதிகாரிகள் அனைவரும் கலந்ரையாடல் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content