செய்தி தமிழ்நாடு

நோய் நொடியின்றி வாழ மீன்பிடி திருவிழா

  • May 3, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி,மருது அய்யனார் கோயில் அருகே அமைந்துள்ள மருதிக்கண்மாயிலில் மழைவரம் வேண்டியும், நோய் நொடியின்றி வாழவேண்டியும் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மருது அய்யனார் கோயில் அருகில் அமைந்துள்ள மருதிக்கண்மாய் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து சுமார் 300 ஏக்கர் நெல் வயல்கள் பாசனம் பெறுகிறது.விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கோடைகாலம் துவங்கி தண்ணீர் வற்றியது. […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

விரைவில் மின் கட்டணங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய மின்சார விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும்இ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டண விலையை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்து திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் […]

செய்தி தமிழ்நாடு

அடுப்பு கரி கொண்டு சென்ற லாரி விபத்து

  • May 3, 2023
  • 0 Comments

உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து அடுப்பு கரி கொண்டு சென்ற கனரக லாரி ஒன்று இன்று அதிகாலை உத்திரமேரூர் வந்தவாசி சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது லாரி ஓட்டுனர் லோகேஸ்வரன் (40), கட்டுப்பாட்டை இழுந்து திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறு […]

இலங்கை செய்தி

டெங்கு நோய் குறித்து வைத்தியரின் அறிவிப்பு

  • May 3, 2023
  • 0 Comments

  கடந்த 4 மாதங்களில் மட்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30;’000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். அதன் தரவுகளின்படி அன்றைய காலகட்டத்தில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும். மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறைய வாய்ப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்…

  • May 3, 2023
  • 0 Comments

நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிர் பிரியும் நேரத்தில் இருந்தவர்களின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி மரணத்திற்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 3, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வரை 28 918 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும். டெங்கு […]

செய்தி தமிழ்நாடு

தீவு போல் மாறிய அரசு மருத்துவமனை

  • May 3, 2023
  • 0 Comments

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள்,வெளி நோயாளிகள் பொதுமக்கள் வந்த செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு முன்புறம் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒரு நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும். மேலும் அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவாயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாதாது போன்று […]

ஆசியா

ஜப்பானில் அலுவலகம் ஒன்றை திறக்கும் நேட்டோ!

  • May 3, 2023
  • 0 Comments

நேட்டோ தனது பிராந்திய அலுவலகம் ஒன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது. இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோவின் இந்த முயற்சிக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,  நேட்டோ ஆசியபசுபிக்வரை தன்னை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு சீனா ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆசியாவில் இவ்வாறான அலுவலகம் திறக்கப்படவுள்ளமை இதுவே முதல்தடவை என்பதும், குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

தலைநகர் பாரீஸில் பட்டப் பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!

  • May 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்தனர். இதன்போது கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதேவேளை குறித்த கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான […]