நோய் நொடியின்றி வாழ மீன்பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி,மருது அய்யனார் கோயில் அருகே அமைந்துள்ள மருதிக்கண்மாயிலில் மழைவரம் வேண்டியும், நோய் நொடியின்றி வாழவேண்டியும் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மருது அய்யனார் கோயில் அருகில் அமைந்துள்ள மருதிக்கண்மாய் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து சுமார் 300 ஏக்கர் நெல் வயல்கள் பாசனம் பெறுகிறது.விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கோடைகாலம் துவங்கி தண்ணீர் வற்றியது. […]













