இலங்கை செய்தி வணிகம்

நாளை பங்குச் சந்தை மூடப்படும்

  • May 3, 2023
  • 0 Comments

  கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால் பங்குச் சந்தை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு

  • May 3, 2023
  • 0 Comments

  வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இன்று (03) பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் […]

இலங்கை செய்தி

கடு அஞ்சுவின் குற்ற அறிக்கைகள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக தகவல்

  • May 3, 2023
  • 0 Comments

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான ரத்மலானே குடு அஞ்சு என்றழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வாவின் குற்றச் செயல்கள் தொடர்பான குற்ற அறிக்கைகள் இன்று (3) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடு அஞ்சு நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல் அறிக்கைகள் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அறிக்கைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன் குடும்பத் தகராறில் மனைவியைத் […]

செய்தி தென் அமெரிக்கா

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொலிசார்

  • May 3, 2023
  • 0 Comments

பிரேசிலில் போலியான கோவிட்-19 தடுப்பூசி ஆவணங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். “பொது சுகாதார அமைப்புகளில் தவறான COVID-19 தடுப்பூசி தகவலைச் செருகியதாக” நம்பப்படும் “குற்றவியல் வலையமைப்பை” குறிவைத்து பெடரல் பொலிசார் ரியோ டி ஜெனிரோ மற்றும் தலைநகர் பிரேசிலியாவில் 16 சோதனைகளை நடத்தியதாகக் கூறினர், அறிக்கை போல்சனாரோவை குறிப்பாக குறிப்பிடவில்லை. நவம்பர் 2021 முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான தவறான தடுப்பூசி சான்றிதழ்கள், […]

இலங்கை செய்தி

3000 மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித்தொகை

  • May 3, 2023
  • 0 Comments

  ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் விருது 2023 இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. G.E.C. சாதாரண தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி G.E.C உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன .இதன்படி, 2022 ஆம் ஆண்டு க.பொ.த பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு கல்வி கற்கத் […]

இந்தியா விளையாட்டு

மழை காரணமாக சமநிலையில் முடிந்த சென்னை லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி

  • May 3, 2023
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை காரணமாக டாஸ் போடுவது சிறிது தாமதம் ஆனது. மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. லக்னோ அணியில் காயம் காரணமாக கேப்டன் கே.எல்.ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக குர்ணால் பாண்ட்யா லக்னோ அணியை […]

உலகம் செய்தி

புட்டடின் மீது கொலை முயற்சி

  • May 3, 2023
  • 0 Comments

  ரஷ்ய அதிபர் புடின் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ட்ரோன்களைப் பயன்படுத்தி படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கிரெம்ளின் அருகே வந்த ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள் மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி விமானங்களை சுட்டு வீழ்த்தினர். ஆளில்லா விமானங்களின் பாகங்கள் கிரெம்ளினைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்துள்ளன, ஆனால் குப்பைகள் காரணமாக கட்டிடங்கள் எதுவும் சேதமடையவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் […]

இலங்கை செய்தி

ஸ்ரீ ரங்காவிற்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

  • May 3, 2023
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கடந்த வருடம் ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதற்கு ரங்கா உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஸ்ரீரங்கா சொத்திற்கு சேதம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார் என குற்றம்சாட்டப்படலாம் எனவும் சிஐடியினர் தெரிவித்திருந்தனர். எனினும் ஸ்ரீரங்கா […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

  • May 3, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும்  ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும்,  ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மின்சாரசபை மறுசீரமைப்புக்களுக்கமைய புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விலை சூத்திரம் 20 ஆண்டுகளுக்கொருமுறை மாறக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா – வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

விளாடிமிர் புட்டினுக்கு எதிரான படுகொலை முயற்சியை முறியடித்ததாக மாஸ்கோ கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை உக்ரைனின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நோர்டிக் தலைவர்களை சந்திப்பதற்காக பின்லாந்துக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில், உக்ரைனில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.