ஐரோப்பா

தலைநகர் பாரீஸில் பட்டப் பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!

பிரான்ஸ் – பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்தனர்.

இதன்போது கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அதேவேளை குறித்த கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்