ஆசியா

அலுவலக நேரத்தின் போது கழிவறை சென்றதற்காக பதவிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்!

  • June 5, 2023
  • 0 Comments

சீனாவில் 6 மணிநேரம் அலுவலக கழிப்பறையில் நேரத்தை செலவிட்டதால் 26 ஆண்டுகளாக வேலை செய்த ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்தவர் வாங்(35). 26 ஆண்டுகளாக அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு வயிற்றில் சிறு சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடல் நிலையைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நிர்வாகம் அதைப் பெரிதாக எடுத்துக் […]

இலங்கை

கோடிக்கணக்கான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பிரஜை

எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 4.611 கிலோ கிராம் தங்கத்தினை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார். இலங்கை சுங்கத்தின் இரத்தின, ஆபரண மதிப்பீட்டு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதான குறித்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னர் பல முறை இலங்கைக்கு […]

இலங்கை

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு!

  • June 5, 2023
  • 0 Comments

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை (06)  ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.    

ஐரோப்பா

குடிபோதையில் விளையாடிய விபரீத விளையாட்டால் பலியான பெண்!

  • June 5, 2023
  • 0 Comments

பிரான்சில், குடிபோதையில் ஆணும் பெண்ணும் விளையாடிய விளையாட்டு விபரீதமானது. சனிக்கிழமையன்று, பிரான்சிலுள்ள Dordogne பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில், மூன்று பிள்ளைகளின் தாயாகிய 47 வயது பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, பயங்கரமான போதையிலிருந்த 55 வயது ஆண் ஒருவர் பொலிஸில் சரணடைந்தார். விசாரணையின்போது, தாங்கள் விளையாடிய விளையாட்டு ஒன்றே அந்தப் பெண்ணின் உயிரைப் பறித்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதாவது, வெள்ளிக்கிழமை இரவு, சிலர் ஒரு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார்கள். குடிபோதையிலிருந்த நிலையில், அந்தப் பெண் […]

பொழுதுபோக்கு

நாடகத்துறைக்கு பேரிழப்பு!

  • June 5, 2023
  • 0 Comments

புகழ்பெற்ற நாடக நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66. அமீர் ராசா ஹுசைன் அரசியலிலும் சில காலம் பணியாற்றினார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு வரை டெல்லி பாஜக துணைத் தலைவராக இருந்தார். இதையடுத்து மோடியை விமர்சித்துவிட்டு அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன் கடந்த ஜூன் 3-ந் தேதி காலமானார். அவரின் மறைவு நாடகத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கையில் மருந்து பொருட்களின் விலை குறைப்பு!

  • June 5, 2023
  • 0 Comments

மருந்துகளின் விலைகளை 15 வீதத்தினால் குறைவடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ம் திகதி முதல் தேசியமருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலைகள் 15 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையல், அரசாங்கம் மக்களுக்கு சாதகமான வகையில் பல மாற்றங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

ஒடிசாவில் மற்றுமொரு புகையிரதம் விபத்து!

கோரமண்டல் கடுகதி புகையிரதம் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு புகையிரதமொன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து பயணித்த கோரமண்டல் கடுகதி புகையிரதம், ஒடிசா […]

ஐரோப்பா

பெல்ஜியம் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை!

  • June 5, 2023
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெல்க்ரோட்டின் எல்லைப் பகுதியில், உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அங்கு பெல்ஜியம்,  உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள   பெல்ஜிய ஒலிபரப்பு VRT, “பாதுகாப்பு மற்றும் தகவல் சேவைகள் அங்கு என்ன நடந்தது என்பதை உறுதியாக அறிய ஒரு ஆய்வு தொடங்கியது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசியா

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்! பரிதாபமாக உயிர் இழந்த 60 பச்சிளம் குழந்தைகள்

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை இராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் […]

இலங்கை

சினிமா பாணியில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ஐவர் கைது!

முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை – பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உந்துருளிகளில் சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், […]