ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : முதற்கட்ட சிகிக்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

  • June 8, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்கை விட அதிகரித்துள்ள நிலையில், சிக்சைக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி நோயாளிகள் சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்த பிறகும், முதல் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. NHS இன் சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மக்கள் தொகையில் 9.5 வீதமானோர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இது நிர்ணயித்த இலக்கை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் […]

இலங்கை

எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால்,  வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாகவும் அமைச்சர் இதன்போது […]

இலங்கை

தமிழ் MPக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்

  • June 8, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த மே மாதம் நடந்த பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் இடம்பெறாத நிலையில் இன்றைய பேச்சுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் இரு நாட்கள் பேச்சு நடந்தது. முதல் நாளில் காணி விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, அரசியல் […]

இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் : அநுரவின் போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

  • June 8, 2023
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியினால் இன்று(08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராகவே போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்,  அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (07) இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி  ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி,  கொடா வீதி மற்றும் சரண வீதி ஊடாக […]

இலங்கை

சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்தது ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • June 8, 2023
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான விருப்பங்களை விரிவுபடுத்துகிறது என்று பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட பிராந்திய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ADB இன் வளரும் உறுப்பு நாடுகளில் சலுகை ஆதாரங்களுக்கான தகுதி தனிநபர் மொத்த தேசிய வருமானம் மற்றும் கடன் தகுதியின் […]

ஆசியா

இந்தோனேசியாவில் காருக்குள் நெருக்கமாக இருந்த இளம்ஜோடி – வழங்கப்பட்ட பயங்கர தண்டனை

  • June 8, 2023
  • 0 Comments

இந்தோனேசியா நாட்டில், கார் ஒன்றிற்கு நெருக்கமாக இருந்த இளம்ஜோடி ஒன்றிற்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது. அடியால் வலி தாங்காமல் சுருண்டு விழுந்தார் அந்த இளம்பெண். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அசைவதைக் கவனித்த பொலிஸார் ஒருவர் அருகே சென்று பார்த்துள்ளார்.காருக்குள் ஒரு 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் உடனடியாக மற்ற அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார். இந்தோனேசியாவில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.ஆகவே, காருக்குள் நெருக்கமாக […]

இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளது. இதன்படி இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே 2023 இல் 3,483 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 2,761 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 26.2% அதிகரிப்பைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இடமாற்று […]

இலங்கை

நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து அவர்களுக்கெதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் சகல எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை […]

மத்திய கிழக்கு

சோமாலியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ; 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • June 8, 2023
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆஸ்திரேலியா

ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்ளும் அவுஸ்ரேலியா : மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 8, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் கொவிட்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில் தடுப்பூசி குறித்து மக்கள் அலட்சியமாக இருக்ககூடாது என அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி ஆறுமாதங்களில் 16. 5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருத்துவசபை கரிசனைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியா தற்போது ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கிறது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச்சில் காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் […]