இலங்கை

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கெடுக்க மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னை பயணம். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னையில் நடைபெற இருக்கும் பதினொராவது(11) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கெடுப்பதற்கு சென்னைக்கு பயணமாகிறார். யூலை மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் இம்மாநாடு இடம்பெறுகின்றது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு ஐரோப்பியத் தமிழ் […]

இலங்கை

35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தது! கஞ்சன விஜேசேகர

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் […]

ஐரோப்பா

ரஷ்ய MIG-31 விமானம் விபத்தில் சிக்கியது – இருவரை காணவில்லை!

  • July 4, 2023
  • 0 Comments

ரஷ்ய MIG-31 விமானம் பசுபிக் கடற்கரையில் விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயிற்சியின்போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், அதில் பயணித்த இருவரின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள அவாச்சா விரிகுடாவில் விமானம் விழுந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் அதன் இரண்டு பணியாளர்களைத் தேடி வருவதாகவும், விமானத்தில் ஆயுதங்கள் இல்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் […]

ஐரோப்பா

பிரான்சில் நஹெலை கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக 01 மில்லியன் நிதி திரட்டிய மக்கள்!

  • July 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நஹெல் என்ற ஆப்பிரிக்க இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதாக தெரிவித்து பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோக்களில் பிரான் முழுவதும் போர்களமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கிடையே நஹெலை சுட்டுக் கொலை செய்த பிரஞ்சு அதிகாரியான ஃப்ளோரியனிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக சில சிலர் நிதி சேகரித்துள்ளனர். இதன்படி இதுவரையில் பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக ஒரு மில்லியன் யூரோ […]

இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை (ஜூலை 05) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு குறித்து Fitch Ratings மதிப்பீடு!

  • July 4, 2023
  • 0 Comments

இலங்கையின் வங்கி முறைமையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்க அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக Fitch Ratings தெரிவித்துள்ளது. ஆனால் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் பல காரணிகளால் மேலும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பணத்தை ஜனாதிபதி விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த அனுமதியளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்து

  • July 4, 2023
  • 0 Comments

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த ஒப்பந்தம் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் திருமதி சபர்ஜா முகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், அமெரிக்க நிறுவன திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (04.07) கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்காவைத் தலமையகமாக கொண்டு இயங்கும் குறித்த […]

ஐரோப்பா

வெள்ளை மாளிகையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்ம பொருள்!

  • July 4, 2023
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்த பொருளின் தன்மையை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் ஜனாதிபதியின் இல்லத்துக்குள்  எவ்வாறு கொண்டுவரப்பட்டது  என்பது பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் Anthony Guglielmi கருத்துப்படி, பொருள் அதன் கலவையை உறுதிப்படுத்த மேலும் சோதனைக்கு உட்பட்டுள்ளது. மேலும் வெள்ளை மாளிகைக்குள் அது நுழைந்த […]

இலங்கை

ஒப்பந்தம் செய்யப்பட்ட எரிபொருள் நிறுவனங்கள் இம்மாதத்தில் விநியோகத்தை ஆரம்பிக்கும் – காஞ்சன!

  • July 4, 2023
  • 0 Comments

நிலையான எரிபொருள் வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் அந்நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எரிபொருள் முகவர்  நிலையங்கள் இம்மாத இறுதிக்குள் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது எரிபொருள் ஏற்றுமதி இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பகமான எரிபொருள் கிடைப்பதை […]

இலங்கை

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை! வெளியான புதிய தகவல்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை முடிவுற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது செயலாளர் இதனை தெரிவித்தார். தற்பொழுது உள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண […]