இலங்கை

அரசின் வசமாகியது பசில் ராஜபக்சவின் வீடு!

  • July 7, 2023
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட வீடொன்று தற்போது அரசு வசமாகியுள்ளது. மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடே அரசுக்கு சொந்தமானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார். மல்வானையில் உள்ள சர்ச்சைக்குரிய இந்த வீடு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த வீட்டை நீதியமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் […]

இலங்கை

போலி நாணயத்தாள்களுடன் இரு இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது!

மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை(6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 15ம், 1000 ரூபாய் போலி தாள்கள் 12ம், 5000 ரூபாய் போலி தாள்கள் 09ம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 64 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]

பொழுதுபோக்கு

Simbu vs Simbu! ‘STR 48’ விரைவில்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நடிகர் சிம்பு, சினிமாவில் சில வருட இடைவெளிக்குப் பிறகு அவர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ மூலம் வலுவான கம்பேக் கொடுத்தார். மற்றும் கவுதம் மேனனின் ‘வெந்து தனிந்து காடு’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கினார். இப்போது அனைவரின் பார்வையும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ புகழ் தேசிங் பெரியசாமி இயக்கும் ‘எஸ்டிஆர் 48’ மீதுதான். சிம்புவின் கேரியரில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை நூறு கோடி […]

ஆசியா

சீனாவில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

  • July 7, 2023
  • 0 Comments

சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் இளைஞர்களிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சமீபத்திய ஆய்வு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி கடந்த 2010 முதல் 2021 வரை தற்கொலை செய்து கொள்ளும் ஐந்து முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை  10% உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 இல் 7% சரிந்தது, அடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளதாகவும் […]

இலங்கை

வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டாலர்களை பதிவு செய்து, ஜூன் மாதத்திற்கான தொழிலாளர்களின் பணம் அதிகரித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ட்விட்டரில், அமைச்சர் நாணயக்கார மேலும் கூறியதாவது, ஜூன் 23, 2023 வரையான காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்த பணம் 2823.3 மில்லியன் […]

பொழுதுபோக்கு

மாமன்னனை Megablockbuster ஆக்கியதற்கு நன்றி கூறுகின்றார் உதயநிதி

  • July 7, 2023
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி, கீர்த்தி சுரேஷ், இவர்களுடன் எதிர்ப்பார்க்காத நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த வடிவேலு என மாமன்னன் வெற்றிக்கொடி கட்டி பறக்கின்றது. இந்த நிலையில் ‘மாமன்னன்’ திரைப்படம் 7 நாட்களில் 36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. […]

ஐரோப்பா

நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல் இல்லாமல் போரிடுவது கடினமானது – செலன்ஸ்கி!

  • July 7, 2023
  • 0 Comments

நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவது “கடினமானது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky இன்று (ஜுலை 07) தெரிவித்துள்ளார். நீண்ட துர ஏவுகணைகளை வழங்கும் முடிவு வொஷிங்டனை சார்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நீண்ட தூர ஆயுதங்கள் இல்லாமல், ஒரு தாக்குதல் பணியை மேற்கொள்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள செலன்ஸ்கி, தற்காப்பு நடவடிக்கையை நடத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் “நாங்கள் அமெரிக்காவுடன் நீண்ட தூர அமைப்புகளைப் பற்றி பேசுகிறோம் எனவும் மற்றைய […]

ஐரோப்பா

இஸ்ரேலில் மீண்டும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்

  • July 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலில் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் அனைனவரும் டெல் அவிவ் நகரில் குவிந்து முழக்கமிட்டனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தன் மீது உள்ள புகார்களை ரத்து செய்ய சட்டவிதிகளை மாற்றி வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர். மக்கள் போராட்டங்களையும் மீறி இஸ்ரேல் பிரதமர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் […]

இந்தியா

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு! குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தனி மனுவும் […]

இலங்கை

இலங்கையில் சில முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்!

  • July 7, 2023
  • 0 Comments

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியாகொட ஆசிய பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ​​போகஹவெல பிரதேசத்தில் உள்ள ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் […]