செய்தி வட அமெரிக்கா

ஆயுத விற்பனைக்கு எதிராக வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா

  • August 30, 2023
  • 0 Comments

பியோங்யாங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் நடத்தும் போருக்காக ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்பதற்கு எதிராக வடகொரியாவை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே சாத்தியமான ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். “ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தவும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று பியோங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கீழ்ப்படியும்படி DPRK […]

ஆசியா செய்தி

இம்ரான் கானின் சிறைக் காவல் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

  • August 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறைக் காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாக பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்தது. சிறப்பு நீதிமன்றம் அட்டாக் சிறையில் நடவடிக்கைகளை நடத்தியது, அங்கு திரு கான் ஆகஸ்ட் 5 அன்று சட்டவிரோதமாக அரசு பரிசுகளை விற்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறைத்தண்டனையைத் தொடங்கினார். ஒரு உயர் நீதிமன்றம் செவ்வாயன்று அந்த தண்டனையை இடைநிறுத்தி, திரு கானை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது, ஆனால் உத்தியோகபூர்வ ரகசிய வழக்கில் […]

இலங்கை செய்தி

சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் கொமர்ஷல் வங்கி கிளை ஊழியர்களால் சுத்திகரிப்பு

  • August 30, 2023
  • 0 Comments

கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளையானது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கொமர்ஷல் வங்கி வட பிராந்திய முகாமையாளர் சிவஞானம், கொமர்ஷல் வங்கி, கிளிநொச்சி கிளை முகாமையாளர் சஞ்சீவ், மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட மற்றும் கடல் சார் […]

ஆப்பிரிக்கா செய்தி

காபோனில் இராணுவ சதிப்புரட்சி – வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜனாதிபதி

  • August 30, 2023
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தேர்தல்களைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆப்பிரிக்க மாநிலமான காபோனில் உள்ள கிளர்ச்சி அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தனர். 64 வயதான அலி போங்கோ, காபோனை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அவரது குடும்பம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது மற்றும் அவரது மகன்களில் ஒருவர் தேசத்துரோக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்று ஆட்சிக்கவிழ்ப்பு […]

பொழுதுபோக்கு

தான் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்த நடிகர்! ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்

சந்திரமுகி -2, ஜிகர்தண்டா – 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ள நிலையில் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் காமாட்சி அம்மன் கோவிலில் மற்றும் சங்கர மடம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார், தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் காஞ்சனா போன்ற பேய் படங்களில் நடித்து இயக்கி வெற்றி திரைப்படங்களை தந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் சந்திரமுகி 2 […]

விளையாட்டு

உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ஜோகோவிச்

  • August 30, 2023
  • 0 Comments

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் […]

உலகம்

நண்டுகளை அழிப்பதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கிய நாடு! என்ன காரணம் தெரியுமா?

இத்தாலி நாட்டில் தற்போது நீல நிற நண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்ப காலத்தில் இத்தாலியில் ஒன்றிரண்டு என நீல நண்டுகள் இருந்த நிலையில், தற்போது அதன் நிலை மாறி, பல கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது காரணமாகி விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் நீல நிற நண்டு இனத்தை சமாளிக்க இத்தாலி அரசாங்கம் அவசர அவசரமாக பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது. இந்த நீல நண்டு இனம் மேற்கு அட்லாண்டிகில் தோன்றி, […]

இலங்கை

தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தை! இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தையானது நேற்று (29) நடாத்தப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தொழில் சந்தையினை மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சேவை துறை, விருந்தினர் விடுதி, தனியார் வைத்தியசாலை , நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் போன்ற துறைகளுக்கான நேர்முக […]

இலங்கை

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு – சந்தேகநபர் தப்பியோட்டம்!

போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றின் போது, இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரளை – வனாத்தமுல்ல பிரதேசத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது, 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, அவருடன் மகிழுந்தில் இருந்த மற்றுமொரு நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும், அதனையடுத்து பொலிஸார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு

  • August 30, 2023
  • 0 Comments

ஒக்டோபர் 14ம் திகதி பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ், அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால் பூர்வீக இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள் . அதுமட்டுமல்லாது சட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்படும்.அதேவேளை அவுஸ்திரேலிய பிரதமரின் […]