பொழுதுபோக்கு

தான் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்த நடிகர்! ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்

சந்திரமுகி -2, ஜிகர்தண்டா – 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ள நிலையில் திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் காமாட்சி அம்மன் கோவிலில் மற்றும் சங்கர மடம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்,

தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் காஞ்சனா போன்ற பேய் படங்களில் நடித்து இயக்கி வெற்றி திரைப்படங்களை தந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் சந்திரமுகி 2 திரைக்கு வெளிவர இருப்பதால் படம் வெற்றி பெற்ற வேண்டி ராகவா லாரன்ஸ் காஞ்சிபுரம் ஆதிசங்கரர் அருள் பாலிக்கும் சங்கர் மரத்திற்கு சென்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜையில் கலந்து கொண்டார்.

அதில் பங்கேற்று பின்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ்,

சந்திரமுகி -2, ஜிகர்தண்டா – 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ளது.

நேற்று நான் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தேன், என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி அளிக்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு இருந்தேன்.

6 மாதங்களாகவே நான் இதை தெரிவித்து வருகிறேன். எந்த ஒரு நல்ல முடிவை எடுத்தாலும் சாமி பாதத்தில் சொல்வது வழக்கம் அதேபோல காஞ்சி பெரியவா காலில் ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம்.

அதன் அடிப்படையில், இன்று காஞ்சி காமாட்சி அம்மனையும், பெரியவாவையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டேன். என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கு முன்பு காஞ்சி காமகோடி மரத்திற்கு சென்று விஜயேந்திர சரஸ்வதி சாமிகள சந்தித்து ஆசி பெற்றார்.

கோவிலுக்கு ராகவ லாரன்ஸ் வருகை தந்ததை அறிந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முந்தியடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content