ஐரோப்பா

அணு ஆயுத சோதனை மீதான தடையை ரஷ்யா கைவிடவில்லை : டிமிட்ரி பெஸ்கோவ்!

  • October 3, 2023
  • 0 Comments

அணு ஆயுத சோதனை மீதான தடையை ரஷ்யா கைவிடவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது ரஷ்யா அணுசக்தியில் இயங்கும் கப்பல் ஏவுகணையை சோதனை செய்ய தயாராகி இருக்கலாம் அல்லது சமீபத்தில் சோதனை செய்திருக்கலாம் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறித்த அறிக்கையை நிராகரித்துள்ளார். தெர்மோநியூக்ளியர் குண்டை வெடிக்க வேண்டும் என்ற ரஷ்ய வர்ணனையாளர் ஒருவரின் ஆலோசனையையும் அவர் நிராகரித்தார். மேற்கு நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக சைபீரியாவின் மீது அதிக உயரத்தில் […]

பொழுதுபோக்கு

BIG UPDATE: தலைவர் 170 இல் அமிதாப் பச்சன்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…

  • October 3, 2023
  • 0 Comments

ரஜினிகாந்தின் தலைவர் 170 இல் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்த அறிவிப்பால் கோலிவுட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெயிலருக்குப் பிறகு ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், ஜெய் பீம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் […]

இலங்கை

புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

  • October 3, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று (03.10) அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெறும் என எச்.ஜே.எம்.அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தமிழ்நாடு

கடலூரில் பட்டப்பகலில் 12ஆம் வகுப்பு மாணவர் குத்திக்கொலை!

  • October 3, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் கடலூரில் 12ஆம் வகுப்பு மாணவர் பேருந்து நிலையத்திலேயே குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜீவா எனும் 12ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.அப்போது புளியங்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், மாணவன் ஜீவாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டப்பகலில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு […]

இலங்கை

முல்லையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்ட பேரணி; படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

  • October 3, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக செவ்வாய்க்கிழமை(03) முன்னெடுத்தனர். நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள் வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் , வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!

விலைச்சூத்திரத்தின்படி எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளையதினம் (04) அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நாளையதினம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

வட அமெரிக்கா

மெக்சிகோவில் டிரக் விபத்தில் 10 அகதிகள் உயிரிழப்பு..!

  • October 3, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் இடம்பெற்ற டிரக் விபத்தில் 10 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதோடு இந்த விபத்தில் மேலும் 25 அகதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர். அவ்வாறு அகதிகள் பயணித்த டிரக் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த அகதிகள் அனைவரும் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த வாரமும் மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற டிரக் விபத்துக்குள்ளானதில் இருவர் […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் 2.5 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டன!

  • October 3, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு முட்டை பற்றாக்குறையை உருவாக்கும் என்பதுடன்.  ஏற்கனவே  மின்சார நெருக்கடியால் போராடி வரும் தொழில்துறையை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் கவுடெங் மாகாணத்தில் அதிகளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சில மளிகைக் கடைகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் உள்ள கண்டல் தாவரங்கள் அழிப்பு

  • October 3, 2023
  • 0 Comments

திருகோணமலை- கண்டி பிரதான வீதி மட்டிக்களி கலப்பு பகுதியில் கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவதை சமூக அபிவிருத்தி கட்சி மற்றும் பொதுமக்கள் எதிர்த்துள்ளனர். திருகோணமலை நகர சபை தீயணைப்பு படை வீரர்களும்,நகர சபை ஊழியர்களும் கண்டல் தாவரங்களை வெட்டி சேதப் படுத்தியுள்ளனர். குறித்த மரங்களை வெட்ட வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் குகதாசன் ஆகியோர் கோரிக்கை விடுத்ததை அடுத்து கிழக்கு மாகாண செந்தில் தொண்டமான் வீதியினூடாக செல்லும்போது கடல் […]

இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டு யானையொன்றின் சடலம் மீட்பு

வயல்வெளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் யானையொன்றின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ வெருங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளி ஒன்றிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. யானையின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானை 10 தொடக்கம் 15 வயதுக்குட்பட்டது என வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். யானையின் பிரேத பரிசோதனை அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்தியர்களால் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளது.