உலகம்

உக்ரைனின் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகம் மீது தாக்குதல்

உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுவீசித் தாக்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் கருங்கடல் துறைமுகத்தில் உக்ரைனின் கிரிமியாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து நான்கு ஏவுகணைகள் மற்றும் 22 தாக்குதல் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைனின் விமானப்படை திங்களன்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர், தானியங்கள் அழிக்கப்பட்டன, மேலும் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகம் சேதமடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா,பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட […]

இந்தியா

புதுடெல்லியில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரிப்பு!

  • November 6, 2023
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவு இருக்க வேண்டிய அளவை விட 500 மடங்கு அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக புதுடெல்லி பல முறை இடம்பிடித்துள்ளது. தற்போது, ​​புது தில்லியில் காற்று மாசு அளவு கணிசமாக அதிகரித்து, அதன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகரில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் […]

உலகம்

போப் பிரான்சிஸ்க்கு உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

86 வயதான போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போப் பிரான்சிஸ், ஐரோப்பிய மதகுருக்களுடனான சந்திப்பிற்காக தயார் செய்யப்பட்ட உரையைப் படிப்பதைத் தவிர்த்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். “காலை வணக்கம். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், உங்களை வரவேற்கிறேன், இந்த வருகைக்கு நன்றி, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது, இதனால் நான் உரையைப் படிக்காமல் நகலை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.” அவர் அவர்களிடம் […]

உலகம்

மோதலுக்கு அனைவரும் பொறுப்பு : பராக் ஒபாமா கருத்து!

  • November 6, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரைப் பற்றிய “முழு உண்மையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மோதலுக்கு அனைவருக்கும் சில பொறுப்புகள் இருப்பதாக கூறிய அவர், யாருடைய கைகளும் சுத்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஹமாஸின் நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இரண்டும்  பயங்கரமானது என விமர்சித்த அவர், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழி […]

ஐரோப்பா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின் மார்ச் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார், இது அவரை குறைந்தபட்சம் 2030 வரை அதிகாரத்தில் வைத்திருக்கும் என்று சர்வேதேச ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. ஏனெனில் பல தசாப்தங்களில் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் ரஷ்யாவை வழிநடத்த வேண்டும் என்று கிரெம்ளின் தலைவர் கருதுகிறார் அக்டோபர் 7 அன்று ரஷ்ய ஜனாதிபதிக்கு 71 வயதாகிறது. கருத்துக் கணிப்புகள் விளாடிமிர் புடின் ரஷ்யாவிற்குள் 80% அங்கீகாரம் பெற்றதாகக் காட்டுகின்றன. விளாடிமிர் புடினுக்கு 1999 ஆம் ஆண்டின் கடைசி […]

பொழுதுபோக்கு

KH 234 – இல் இணைந்த த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

  • November 6, 2023
  • 0 Comments

கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் KH 234 படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி உள்ளன. ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. வழக்கம்போல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். த்ரிஷாவும், நயன்தாராவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்டது. படக்குழு இதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. With utmost delight, we greet and welcome the dazzling actor @trishtrashers […]

இலங்கை

பாடசாலை தவணைகள் ஆரம்பம் பற்றிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தவணை ஆரம்பம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.மீளவும், பெப்ரவரி மாதம் 2ஆம்(02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கபடும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது. 2023 ஆம் ஆண்டுக்கான […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வேகமாக பரவும் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி வீடியோ? உண்மையா?

  • November 6, 2023
  • 0 Comments

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பான் இந்தியா நாயகியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷின் டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார். கடந்த ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்திருந்தார் ராஷ்மிகா. https://twitter.com/itzSekar/status/1721460485764399592 தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்தும்வகையில் டீப்ஃபேக் மூலம் அவரது முகத்தை வேறொரு நபரின் உடலில் பொருத்தி தற்போது சமூக வலைதளங்களில் […]

இலங்கை

திருகோணமலையில் கெப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான முற்சக்கர வண்டி ;கணவன் மனைவி படுகாயம்

  • November 6, 2023
  • 0 Comments

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த- மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யு. எம்.சேனககுபண்டார (39) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மட்டக்களப்பில் இருந்து […]