மத்திய கிழக்கு

ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல்: பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக்கொலை

  • November 6, 2023
  • 0 Comments

கிழக்கு ஜெருசலேமில் ராணுவ வீராங்கனை மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று, கிழக்கு ஜெருசலேமிலுள்ள Shalem என்னுமிடத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர், பெண் ராணுவ வீராங்கனைகளை கத்தியால் குத்தியுள்ளார். அதில், ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார், மற்றொரு பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 20 வயதுள்ள அந்த பெண்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவரை இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர், […]

இலங்கை

இலுப்பைக்குளம் பகுதியில் தோன்றிய புத்தர் சிலை!

  • November 6, 2023
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று (06.11) புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு  நிலவியது. குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கட்டுமானப் பணிகளுக்கு எதிராக ஆளுநர் தடை உத்தரவு […]

இலங்கை

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர்

  • November 6, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இலங்கை

பிரபல பாடகர் அதுல ஸ்ரீ கமகே காலமானார்

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60வது வயதில் காலமானார் என குடும்பத்தினர். தெரிவித்துள்ளனர். சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதான குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

காசாவிற்கு மனிதாபிமான உதவியை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ஐரோப்பிய ஒன்றியம் காசாவுக்கான மனிதாபிமான உதவியை 25 மில்லியன் யூரோக்கள் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் திங்களன்று தெரிவித்தார். “இவ்வாறு செய்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிக்காக மொத்தம் 100 மில்லியன் யூரோக்களை செலவிடும்” என்று வான் டெர் லேயன் பிரஸ்ஸல்ஸில் ஒரு உரையில் தெரிவித்துள்ளார். முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையில் […]

ஐரோப்பா

பிரெஞ்சி விமான நிலையத்தில் கூட்டுப்பிராத்தனை செய்தவர்களால் ஏற்பட்ட சர்ச்சை!

  • November 6, 2023
  • 0 Comments

பிரெஞ்சு விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் சிலர் கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டுள்ள படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், மற்றும் விமான நிலைய ஆபரேட்டர் இந்த சம்பவத்தை வருந்தத்தக்கது என்று விவரித்தார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட படங்கள், பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் புறப்பாடு மண்டபத்தில் பல டஜன் கணக்கான  பயணிகள் ஜோர்டானுக்கு செல்லும் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் பிராத்தனையில் ஈடுபடுவதை காட்டுகிறது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் பிரான்சில் பதற்றம் […]

இலங்கை

கடத்தல் முயற்சியின் போது வீதி நெடுங்கிலும் கொட்டப்பட்ட மணல் – தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்

  • November 6, 2023
  • 0 Comments

டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியிலேயே இவ்வாறான நிலை இன்று அதிகாலை ஏற்பட்டது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர். இதனையடுத்து டிப்பரில் மணலை கடத்தியவர்கள் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.இதன் காரணமாக வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் […]

பொழுதுபோக்கு

சூர்யாவின் `வாடிவாசல்’ திரைப்படம் பற்றி அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

  • November 6, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்துள்ளார். அமீர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாயவலை’ படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை. அதனால், இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னை’ ராஜன் ரோல் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன். […]

உலகம்

காசாவிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் : பிளிங்கன் உறுதி!

  • November 6, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள பொதுமக்களுக்குச் சென்றடையும் உதவித் தொகையை விரிவுபடுத்துவதற்கு வாஷிங்டன் “மிகவும் ஆக்ரோஷமாக” செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். துருக்கிய வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடானுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் சொன்னது போல், காசாவில் அதிக மனிதாபிமான உதவிகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக வேலை செய்கிறோம், அதைச் செய்வதற்கான உறுதியான வழிகள் எங்களிடம் உள்ளன என்று கூறினார்.

இலங்கை

சோழன் உலக சாதனை படைத்த 2 வயது சிறுவன்..!

2 வயது 11 மாதங்கள் ஆன ஆரோன் சாத்விக் என்ற சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனே ஆரோன் சாத்விக். நேற்று (05) பலாங்கொடை பெரிய மைதானத்தில் சிறுவன் இச் சோழன் உலக சாதனை படைத்துள்ளார் . நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி […]