இலங்கை

பொது நிறுவனங்களாக மாற்றப்படும் ரூபவாஹினி மற்றும் SLBC

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதலான புள்ளி விபரங்களை முன்வைத்து, இந்த அலைவரிசைகள் எவ்வாறு நட்டம் அடைந்துள்ளன என்பதை குழுவின் […]

பொழுதுபோக்கு

பொதுமேடையில் நடிகை ராஷ்மிகாவை மறந்து போன ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர்.. திடீரென செய்துள்ள காரியம்!

  • November 28, 2023
  • 0 Comments

பொதுமேடையில் நடிகை ராஷ்மிகாவை மறந்து போன ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் திடீரென செய்துள்ள காரியம் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1ம் திகதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் என பறந்து பறந்து படக்குழு பத்திரிகையாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் […]

இலங்கை

ஜோசப்வத்தை பிரதேசத்தில் முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

  • November 28, 2023
  • 0 Comments

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 36 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி […]

இலங்கை

இலங்கையில் கர்ப்பிணிகளுக்கான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

  • November 28, 2023
  • 0 Comments

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் வைட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக கல்சியம் , மாத்திரைகள் வரவில்லை என்கிறார்கள். இதனால், வைட்டமின்கள், கல்சியம், மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளது என தாய்மார்கள் கூறுகின்றனர். இதுதவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை

இலங்கையில் தண்ணீரை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை : ஜீவன் தொண்டமான்!

  • November 28, 2023
  • 0 Comments

தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கவும் செலவைக் குறைக்கவும் அரச-தனியார் பங்காளித்துவத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கான சூத்திரம் ஒன்று தேவைப்படுவதாகவும், அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற […]

ஐரோப்பா

பிரித்தானிய துணைப் பிரதமரை சந்திக்க மறுப்பு தெரிவித்த கிரேக்கத் தலைவர்

பார்த்தீனான் சிற்பங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தைக்குப் பதிலாக, பிரித்தானிய துணைப் பிரதமர் ஆலிவர் டவுடனுடனான சந்திப்பை கிரேக்கப் பிரதமர் நிராகரித்துள்ளார் . கிரீஸின் பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், திங்களன்று லண்டனில் சுனக் உடனான சந்திப்பை திடீரென ரத்து செய்ததால் “ஆழ்ந்த ஏமாற்றம்” என்று கூறினார், சந்திப்பின்போது அவர் சிற்பங்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையில் பண்டிகை காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விசேட நடவடிக்கை!

  • November 28, 2023
  • 0 Comments

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. புதிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்தார். இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட சீனியை அதிகபட்ச சில்லறை விலையான 275 ரூபாவுக்கு 25 சென்ட் வரியில் நுகர்வோருக்கு பல்பொருள் அங்காடிகளிலும், பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் விற்பனை செய்யும் […]

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான T20 கிரிக்கெட்… ஆஸ்திரேலிய வீரர்கள் 6 பேர் திடீர் விலகல்!

  • November 28, 2023
  • 0 Comments

இந்தியாவிற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் இருந்து 6 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகி தாயகம் திரும்புகின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த 6 […]

பொழுதுபோக்கு

தளபதி 68 படத்தில் இணைந்த நடிகை இவானா… அட இவங்களுமா?

  • November 28, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சென்னையிலேயே படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் […]

தமிழ்நாடு

நான் கூறியதில் தவறு இல்லை! மன்னிப்பு கேட்க மாட்டேன் – மீண்டும் கூறிய குஷ்பு

  • November 28, 2023
  • 0 Comments

சர்ச்சையை கிளப்பிய ‘சேரி’ மொழி விவகாரம் தொடர்பில் மீண்டும் ஊடகத்தை சந்தித்த நடிகை குஷ்பு தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலி கான் பேசியதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத குஷ்பு, தற்போது திரிஷாவுக்காக குரல் கொடுத்திருக்கிறார் என […]