பொழுதுபோக்கு

“என்னை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் இவர் தான்” போட்டுடைத்தார் ஷகிலா..

  • November 28, 2023
  • 0 Comments

பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தனக்கு நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ விசித்ரா எனது தோழி தான். இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ளோம். தனது அனுபவத்தை அவர் மனம் திறந்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் அதை யார் செய்தார் என்பதையும், அந்த ஹீரோவின் பெயரையும் விசித்ரா குறிப்பிட்டிருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஷகிலா “நான் இன்னும் தெலுங்கு திரையுலகில் […]

இலங்கை

யாழ். சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

  • November 28, 2023
  • 0 Comments

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து, ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

கொலம்பியாவில் சிறுமியின் மூளையைத் தின்று, ஆளைக் கொன்ற அமீபா; நீச்சல்குளங்களை நாடுவோருக்கு எச்சரிக்கை!

  • November 28, 2023
  • 0 Comments

இப்படியும் மரணம் சம்பவிக்குமா என்றஅதிர்ச்சியூட்டும் செய்திகளின் வரிசையில் கொலம்பியாவை சேர்ந்த சிறுமி ஒருவரின் இறப்பு சேர்ந்திருக்கிறது. நீச்சல் குளங்கள் மற்றும் சரியாக சுத்தம் செய்யப்படாத நீர்நிலைகளில் நீராடுவோருக்கு, அங்கு காத்திருக்கும் ஆபத்தை இந்த சிறுமியின் மரணம் பாடமாக உணர்த்தி இருக்கிறது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்ற 10 வயது சிறுமி சதா துறுதுவென இருப்பார். டென்னிஸ், ஸ்கேட்டிங், பாலே நடனம், ஜிம்னாஸ்டிக் என பலவற்றிலும் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவும் […]

இலங்கை

07 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பிரஜைகளுக்கு கட்டணம் இல்லாமல் விசா வழங்குவதற்கான நிபந்தனைகள் வெளியீடு!

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 7 வெளிநாடுகளில் இருந்து வரும் பிரஜைகளுக்கு இலங்கை வந்தவுடன் கட்டணம் அறவிடாமல் விசா வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒக்டோபர் 24ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீன, இந்திய, இந்தோனேசிய, ரஷ்ய, தாய், மலேசியா மற்றும் ஜப்பானிய பிரஜைகளுக்கு மார்ச் 31, 2024 வரை கட்டணம் வசூலிக்கப்படாமல் விசா முறை நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு, […]

உலகம்

புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்த நைஜர் தலைவர்கள்

நாட்டில் புலம்பெயர்ந்தவர்களைக் கடத்துவதைக் குற்றமாக்கும் எட்டு ஆண்டுகள் பழமையான சட்டத்தை நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர்கள் ரத்து செய்துள்ளனர். நைஜரின் பாலைவனம் வழியாக லிபியா மற்றும் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோரை கடத்திய கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மத்தியதரைக் கடல் முழுவதும் மக்கள் பாய்வதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி மொஹமட் பாஸூம் ஜூலை மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் தூக்கியெறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெனரல் அப்துரஹ்மானே […]

இலங்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் : இலங்கைக்கும் பாதிப்பு!

  • November 28, 2023
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இலங்கையின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. கொந்தளிப்பு தன்மையை பொறுத்து மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை

மக்களே அவதானம்! இலங்கையில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் திகதி வரை, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 75,377 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 15,953 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 35,553 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாண வாரியாக அதிகபட்சமாக, நவம்பர் மாதத்தில் 6,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நுளம்பு உற்பத்தியாகும் […]

பொழுதுபோக்கு

அடேங்கப்பா… நம்ம ஆண்டனி தாஸின் சொத்து மதிப்பு இவ்வளவா.?

  • November 28, 2023
  • 0 Comments

நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். கேஜிஎப் எனும் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார் சஞ்சய் தத். அதைத்தொடர்ந்து லியோ படத்தில் விஜய்யின் அப்பா கேரக்டரில் ஆண்டனி தாசாக நடித்திருந்தார். சஞ்சய் தத்தின் சொத்து மதிப்பு பாலிவுட் சினிமா ரசிகர்களால் வியந்து பார்க்கப்படுகிறது. உண்மையில், சஞ்சய் சினிமாவுக்கு வந்து தான் இதையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர் பிறந்ததே பெரிய பணக்காரனாகத்தான். […]

இலங்கை

நிரந்தர போர் நிறுத்தம் கோரி வெள்ளை மாளிகை முன் உண்ணாவிர போராட்டத்தில் இறங்கிய அமெரிக்க நடிகை

  • November 28, 2023
  • 0 Comments

அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடிகை சிந்தியா நிக்சன் காசாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்த பணியில் தான் தொடர்ந்து சில நாட்கள் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் கூடுதல் நிதியுதவியை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்க […]

ஆப்பிரிக்கா

சோமாலியாவில் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 28, 2023
  • 0 Comments

சோமாலியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக அண்டை நாடான கென்யாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக பதிவாகியுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உயிர், உடமை சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சோமாலியர்களின் எண்ணிக்கை […]