தமிழ்நாடு

8 வயது சிறுவனை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்த இளம்பெண்!

  • December 19, 2023
  • 0 Comments

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 8 வயது சிறுவன், ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் – சிந்துமதி தம்பதி. இவர்களின் 8 வயது மகன் அனிஷ். 2ம் வகுப்பு படித்து வந்த அனிஷ், கடந்த 16ம் திகதி மாயமானார். இதுகுறித்து, பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். சிறுவன் காணாமல் போய் 24 மணி […]

இலங்கை

திருகோணமலை மூன்று நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்- யான்ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது . இதன் அடிப்படையில் இன்று (17) காலை 6 மணி அளவில் பதவியா நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் யான்ஓயா நீர் தேக்கத்தின் ஐந்து கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கதவுகள் 450 மில்லி மீட்டரிலும், இரண்டு கதவுகள் 200 மில்லி மீட்டரிலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடைமழை […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பரவி வரும் மர்ம தொற்று…நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்!

  • December 19, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் மர்ம தொற்று நோய் ஒன்று பரவுவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகங்களில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் காணப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் தரப்பு வைரஸ் பரவல் தொடர்பில் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதுடன், உண்மை நிலவரத்தை வெளியிடவும் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.ரஷ்ய இணையப்பயன்பாட்டாளர்கள் பகிர்ந்துள்ள காணொளிகளில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்துக்கிடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, டிசம்பர் 17ம் திகதி ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு […]

மத்திய கிழக்கு

மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலை : ஒரு விரிவான பார்வை!

  • December 19, 2023
  • 0 Comments

செங்கடலைச் சுற்றியுள்ள பகுதியை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் மத்திய கிழக்கில் வெப்பமான சூழல் உருவாகியுள்ள பகுதி என்று அழைக்கலாம். சவூதி அரேபியா, ஏமன், எகிப்து, சூடான், எரித்திரியா மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள குறுகிய கடல் பகுதி செங்கடல் என்று அழைக்கப்படுகிறது. இது உலகப் புகழ்பெற்ற வணிகக் கடல் பாதையாக அறியப்படுகிறது. செங்கடல் மற்றும் புகழ்பெற்ற சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய பகுதிக்குள் எளிதில் நுழைவதே இதற்குக் காரணம். ஆனால் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் […]

இலங்கை

யாழ் கொக்குவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது

  • December 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும் நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

  • December 19, 2023
  • 0 Comments

கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீட்டுத் தொகுதிகள் இன்று (19.12) அதிகாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பேருவளை, பயாகல, அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கட்டுகுருந்த பயிற்சி முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர். பேருவில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் மற்றும் திரும்பும் பெருந்தொகையான படகுகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடுமையான […]

இலங்கை

இலங்கை – கிரிபத்கொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

  • December 19, 2023
  • 0 Comments

கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் மூவர் நேற்று (18.12) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும்,  மோதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5200 மில்லிகிராம் ஹெரோயினும் காணப்பட்டது. கைத்துப்பாக்கி […]

இலங்கை

இலங்கையில் மீளவும் மின்கட்டண திருத்தம்!

  • December 19, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக […]

இலங்கை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • December 19, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1 கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ […]

இலங்கை

இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை!

  • December 19, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை ஸ்தாபிப்பதற்கு 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் உருமாற்ற முகவர் நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் அதன் ஒரு அங்கமாக செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மத்திய நிலையத்தை நிறுவுவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். இந்த நிறுவனங்களை நிறுவுவதன் நோக்கம், மூலோபாய மற்றும் கொள்கைத் தலைமையை வழங்குதல், அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றம் செயல்முறைக்கு […]