தமிழ்நாடு

8 வயது சிறுவனை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்த இளம்பெண்!

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 8 வயது சிறுவன், ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் – சிந்துமதி தம்பதி. இவர்களின் 8 வயது மகன் அனிஷ். 2ம் வகுப்பு படித்து வந்த அனிஷ், கடந்த 16ம் திகதி மாயமானார். இதுகுறித்து, பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

சிறுவன் காணாமல் போய் 24 மணி நேரம் கடந்த நிலையில், அவர் குறித்து எந்த தகலும் இல்லாததால், அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத் தொடர்ந்து 17ம் திகதி, பாதிரிவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவனின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாதிரிவேடு காவல் நிலையம்

இந்நிலையில், பொலிஸார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண் ரேகாவை பிடித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது, ரேகா மற்றொரு நபருடன் சேர்ந்து அனிஷை அடித்துக் கொலை செய்து, மூட்டையில் கட்டி ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அருகே ஒரு முட்புதரில் வீசியது அம்பலமானது.

இதையருத்து அங்கே சென்ற பொலிஸார் சிறுவனின் சடலத்தை கண்டுபிடித்து மீட்டனர். இந்த தகவல் அறிந்த‌தும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரேகாவின் வீட்டை அடித்து பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். கொலை குறித்து ரேகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை என்ன காரணத்துக்காக ரேகா கொலை செய்தார் என்ற விவரம் ஏதும் தெரியாத நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content