இந்தியா

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடவுள்ள முதல் முத்திரை…

  • December 29, 2023
  • 0 Comments

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும், நம் மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று […]

ஐரோப்பா

இரவோடு இரவாக ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : அதிர்ச்சியில் மேற்குலகம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுளளது. ரஷ்யா கியேவ் மற்றும் பிற உக்ரேனிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது , சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கபப்ட்டுளளது. உக்ரைன் முழுவதும் சேதமடைந்த கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் […]

மத்திய கிழக்கு

தவறுதலாக பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்; விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்!

  • December 29, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி, சுமார் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்காலிக போர் நிறுத்த காலத்தில் பணயக்கைதிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் படைகள் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது காசாவின் ஷேஜாயா நகரில், தவறுதலாக 3 பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற சம்பவம் […]

பொழுதுபோக்கு

72 துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்துக்கு அரசு மரியாதை…. இறுதி சடங்கில் முதல்வர் ஸ்டாலின்

  • December 29, 2023
  • 0 Comments

கேப்டன் விஜயகாந்த், டிசம்பர் 27-ஆம் தேதி மாலை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 6.10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் கூட்ட நெரிசல் காரணமாக.. அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி […]

ஆசியா

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ள பாகிஸ்தான் அரசு!

  • December 29, 2023
  • 0 Comments

புதிதாக பிறக்கவுள்ள 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு முடிவடைந்து 2024ம் பிறக்கவுள்ள நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார். புத்தாண்டுக்கான தடை குறித்து மக்களிடம் பேசி பேசிய பொறுப்பு பிரதமர் கக்கர், ‘காசாவில் […]

இலங்கை

கடற்றொழிலாளர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் : கண்டனம் தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் நீங்கள் என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால் பொது அமைப்புகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் காடையர்கள் என கடற்றொழிலாளர் சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதற்கும் இதன்போது […]

இலங்கை

கிளிநொச்சியினை சேர்ந்த நபரொருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்…

  • December 29, 2023
  • 0 Comments

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிளிநொச்சியினை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை இன்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். அதிஸ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது […]

இலங்கை

டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவிக்கு நேர்ந்த கதி

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுளளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது மோதியதில் மாணவியொருவர் படுகாயமடைந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி […]

உலகம்

காசா உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் 41 பேர் பலி

தெற்கு காசாவின் முக்கிய நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனை அருகே இரண்டு நாட்களாக இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ரெட் கிரசன்ட் வளாகத்தில் இடம்பெயர்ந்தவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 21,320 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 55,603 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

“ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை தேடிச்சென்ற இலங்கை எம்.பி

  • December 29, 2023
  • 0 Comments

தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்பிய  “ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.