மத்திய கிழக்கு

போரின் கோர தாண்டவத்திற்கு மத்தியில் நடந்தே சென்று குழந்தை பெற்றுக்கொண்ட பெண்!

  • December 29, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், பாலஸ்தீனத்தில் இருந்து பெண் ஒருவர் நடந்தே சென்று குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் கண்ணீரை வரவழைக்கிறது. இமான் அல்-மஸ்ரி, என்ற பெண் ஒருவர் தனது நான்காவது குழந்தையை பெற்றுக்கொள்ள பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து ஏறக்குறைய 05 கி.மீற்றர் நடந்துச் சென்று தெற்கு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் போரின் பிடியில் பாதித்துள்ள மற்ற நோயாளிகளுக்கு இடமளிக்க வேண்டிய […]

இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணங்களில் தாமதம் – வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

  • December 29, 2023
  • 0 Comments

பாரீஸ் நகரில் டயர் வெடித்ததாலும், மற்ற விமானங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டதாலும் கிறிஸ்துமஸ் காலத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வாடிக்கையாளர்களிடம் விமான சேவை மன்னிப்புக் கோரியுள்ளது. கடந்த சில நாட்களாக விமான சேவையினால் ஏற்பட்ட தொடர் இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட  பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பரபரப்பான காலகட்டத்தில் 2 ஏர்பஸ் ஏ330 […]

இந்தியா

இந்திய பெருங்கடலில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கைக்கும் பாதிப்பா?

  • December 29, 2023
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்தார். ஒரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானது. இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் பதிவாகியுள்ளது

ஆஸ்திரேலியா

வீடுகளை பூட்டி வைக்குமாறும் ஆஸ்திரேலிய மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

  • December 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   இதன்படி, நத்தார் காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் இருபது வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது தமது சொத்துக்களை பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவு பயணங்களை மேற்கொள்வதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களை திருடர்கள் மிகவும் கவனமாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   வீட்டை விட்டு வெளியேறும்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கதவுகள் […]

இலங்கை

இலங்கை – கொழும்பில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்ற நடவடிக்கை!

  • December 29, 2023
  • 0 Comments

கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற மரங்ககளை எதிர்காலத்தில் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் கிளை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 200 மரங்களின் கிளைகளை சமப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார். அண்மையில் கொழும்பில் மரமொன்று பேருந்து ஒன்றின் மீது விழுந்த நிலையில், பாரிய விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

காசாவில் இருந்து வெளியேறிய 150,000 பாலஸ்தீனியர்கள்

  • December 29, 2023
  • 0 Comments

மத்திய காசா பகுதியில் வசிக்கும் 150,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கைகள் மேலும் விரிவடைவதே இதற்குக் காரணம். தற்போது, ​​மத்திய காசா பகுதிக்கு ஏராளமான டாங்கிகள் வந்துள்ளன, கடந்த 11 வார மோதல்களில் 21,300 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியால் காத்திருக்கும் ஆபத்து!

  • December 29, 2023
  • 0 Comments

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த இறைச்சிக் களஞ்சியத்தை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அதன் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் வெப்பில் அறிமுகமாகும் வசதி!

  • December 29, 2023
  • 0 Comments

உலகெங்கிலும் வாட்ஸ் அப் தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் இவர்களுக்கு போட்டியாக பல சேட்டிங் தளங்கள் கொண்டுவரப்பட்டாலும், வாட்ஸ் அப் தளத்தின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை பெற்றுவிட்டது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் நிறுவனமும் பயனர்களை தங்களுடைய செயலியிலேயே தக்க வைக்க பல புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ற அப்டேட் பயனர்கள் மத்தியில் மிகவும் […]

வட அமெரிக்கா

பிரேசிலில் தனது கணவரின் ஆணுறுப்புடன் காவல் நிலையத்தல் சரணடைந்த பெண்!

  • December 29, 2023
  • 0 Comments

பிரேசிலிய பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த நோக்கத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  சாவ் பாலோவிற்கு அருகிலுள்ள அதிபாயாவில் வசிக்கும் குறித்த பெண் தனது கணவரின் ஆணுறுப்பை வெட்டியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தனது 15 வயது மருமகளுடன், கணவர் உடல் உறவு கொண்டமை தெரியவந்த நிலையில், தான் மேற்படி செய்ததாக விளக்கமளித்துள்ளார். துண்டிக்கப்பட்ட உறுப்பை கழிப்பறையில் வீசுவதற்கு முன், அந்த பெண் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் இரண்டாவது கொவிட் மரணம் – யாழில் அச்சுறுத்தும் டெங்கு

  • December 29, 2023
  • 0 Comments

  கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மரணம் பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் பதிவான இரண்டாவது கோவிட் தொற்று மரணம் இதுவாகும். இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எதிர்வரும் 02 வாரங்களில் டெங்கு நோயாளர்கள் பெருமளவில் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.