இலங்கை

வவுனியா இரட்டை கொலையின் பிரதான சந்தேக நபருக்கு அச்சுறுத்தல்!

  • January 9, 2024
  • 0 Comments

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைகொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேக நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து எரியுண்ட வீட்டு உரிமையாளரான குடும்பஸ்தர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் லொரி மீது சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து: 25 பேர் பலியான சோகம்!

  • January 9, 2024
  • 0 Comments

பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ், லாரி மீது மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். பிரேசிலின் பஹியாவில் உள்ள நோவா பாத்திமா – கவியாவோ நகரங்களுக்கு இடையிலான ஃபெடரல் சாலையில் நேற்று இரவு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற மினி பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மீட்புப் […]

பொழுதுபோக்கு

பொங்கலன்று தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் டிவி செனல்கள்….

  • January 9, 2024
  • 0 Comments

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி டிவி செனல்களில் புத்தம் புதிய படங்களை இறக்குகின்றனர். விஜய் டிவியில் வருகிற ஜனவரி 14-ந் தேதி போகிப் பண்டிகையன்று பிற்பகல் 3 மணிக்கு சரத்குமார் நடித்த பரம்பொருள் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11.30 மணிக்கு யோகிபாபுவின் லக்கி மேன், மாலை 5.30 மணிக்கு உதயநிதியின் மாமன்னன், இரவு 9 மணிக்கு போர் தொழில் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. […]

இலங்கை

இலங்கை : TIN இலக்கத்தை பெற்றுக்கொள்ள அனைத்து இடங்களிலும் கவுன்டர்களை திறக்குமாறு அறிவிப்பு!

  • January 9, 2024
  • 0 Comments

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கவுன்டர்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட்கள் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கவுன்டர்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச […]

ஆசியா

தென் கொரியாவில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!

  • January 9, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை நிறுத்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். கடந்த சில தசாப்தங்களாக நாய் இறைச்சி உணவருந்துபவர்களுக்கு ஆதரவாக இல்லை. குறிப்பாக இளைஞர்கள் அதைத் தவிர்க்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த சட்டத்தின் கீழ், நாய்களை வளர்ப்பது அல்லது வெட்டுவது, நாய் இறைச்சியை விநியோகிப்பது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும். சட்டத்தை […]

இலங்கை

சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

  • January 9, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு, தனிநபர் வருகையின் அடிப்படையில் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பயண இணையதளங்களின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் வணிக இதழ் இதனைத் தெரிவித்துள்ளது. அந்தப் பட்டியலின்படி ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு மேலே உள்ளன. பல கடினமான வருடங்களின் பின்னர் சுற்றுலாத்துறையில் இலங்கை முன்னோக்கி வந்துள்ளமை காணப்படுகின்றது.

இலங்கை

இலங்கை : மலையகத்தில் மருந்து கடைகளை சுற்றிவளைத்த பொலிஸார்!

  • January 9, 2024
  • 0 Comments

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு நோய்களுக்காக சில மருந்துக்கடைகளால் வழங்கப்படும் போதை மாத்திரைகளை உபயோகிக்கப் பழகிவிட்டதால், மருந்துக் கடைகளில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க முயல்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், ஒவ்வொரு மருந்தகங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைப்பை பராமரிக்கவும், இரவில் ஒவ்வொரு மருந்தகமும் மூடப்படுவதால் இரவு ரோந்து பணியில் […]

மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்!

  • January 9, 2024
  • 0 Comments

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா சுட்டி காட்டி “மற்றொரு போர்” என எச்சரித்துள்ளது. சமீபத்தில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதற்றங்கள் அதிகமாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கடந்த சனிக்கிழமையன்று மெரோன் மலையில் உள்ள தளத்தை தாக்கியதாக இஸ்ரேலிய […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதி சுற்றிவளைப்பு

  • January 9, 2024
  • 0 Comments

நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சீன தம்பதியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களுடன் அவர்கள் வெளியேற முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியிடம் இருந்து 175 மாணிக்கக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணிக்கக் கற்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சீன தம்பதி மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொழுதுபோக்கு

அயலான் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை… அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • January 9, 2024
  • 0 Comments

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பேண்டஸி திரைப்படமான அயலான் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான். ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிக்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கடந்த […]