உலகம்

ஜாம்பியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்… 400-ஐ கடந்த இறப்புக்களின் எண்ணிக்கை

  • January 18, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பாதிப்பால் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா பாதிப்பால் நாடு முழுவதும் பாடசாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானமொன்று மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜாம்பியா அரசாங்கமானது தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி சேவையை முன்னெடுத்து வருகிறது. அத்துடன் நாளுக்கு 2.4 மில்லியன் சுத்தமான குடிநீரும் […]

இந்தியா

பிரதமர் மோடி சென்னை வருகை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு பயணம் இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் […]

இந்தியா

சொகுசு ஹோட்டலில் 13 நாட்கள் தங்கி விட்டு வாடகை தராமல் தப்பியோட முயன்ற பெண்ணொருவர் கைது!

  • January 18, 2024
  • 0 Comments

டெல்லியில் சொகுசு ஹோட்டலில் 13 நாள் தங்கிவிட்டு பணம் தராமல் தப்பி ஓட முயன்ற ஆந்திர பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி சாமுவேல் (37). இவர், டெல்லி விமான நிலையம் அருகே ஏரோசிட்டியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 15 நாட்களாக தங்கியிருந்துள்ளார். ஆனால், அதற்கான வாடகையை செலுத்தாததால், இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது, ஜான்சிராணி அவர்களைக் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும், அவரை ஹோட்டல் ஊழியர்கள் மடக்கிப் […]

ஐரோப்பா

மீண்டும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா: நிராகரித்த ரஷ்யா

ரஷ்யாவின் உயர்மட்ட இராஜதந்திரி, அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார், வாஷிங்டன் உக்ரேனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் போது அது சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். உக்ரேனை ரஷ்ய பிரதேசத்தில் தாக்குதல்களை அதிகரிக்க ஊக்குவிப்பதன் மூலம் மேற்குலகம் உலக பாதுகாப்பு அபாயங்களை எரியூட்டி வருவதாக மாநாட்டில் பேசிய Sergey Lavrov குற்றம் சாட்டினார் மேலும் Kyiv க்கு மேற்கத்திய ஆதரவைப் பொருட்படுத்தாமல் மாஸ்கோ மோதலில் அதன் இலக்குகளை அடையும் என்றும் எச்சரித்தார் […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான தகவல் : புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள 03 இலட்சம் பேர்!

  • January 18, 2024
  • 0 Comments

7 இலட்சம் நிவாரண மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக நிவாரணத்தை பெற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 5000 குடும்பங்கள்  தகுதியற்றவை என  பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அஸ்வசும நலன்புரி திட்டம் தொடர்பாக  640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மூன்று இலட்சம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக   பதில் நிதியமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சில் இன்று […]

இலங்கை

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது உகண்டாவின் கம்பாலா நகரை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது. […]

இலங்கை

இலங்கை : புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான தகவல்!

  • January 18, 2024
  • 0 Comments

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு வரும் ஜூன் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக  ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (18.01) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய மின்னணு அடையாள அட்டையை அமல்படுத்துவது தொடர்பான அடிப்படைப் பணிகளை நாங்கள் முழுமையாக முடித்துவிட்டோம். தற்போது, ​​அதற்கான உள்கட்டமைப்புகள் தயாராகி […]

ஐரோப்பா

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வெசெலே என்ற குடியேற்றத்தை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தெற்கு இராணுவக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் பிரிவுகளின் தீவிர முயற்சிகளால் கிராமம் எடுக்கப்பட்டது என்று மட்டுமே அமைச்சகம் தெரிவித்துளளது. தீர்வு குறித்த விவரங்களை அமைச்சகம் தெரிவிக்கவில்லை. சுமார் 100 பேர் வசிக்கும் அதே பெயரைக் கொண்ட ஒரு கிராமம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பக்முட் நகருக்கு வடகிழக்கே 20 […]

இலங்கை

இலங்கையில் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய போராட்டம் : தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

  • January 18, 2024
  • 0 Comments

பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டமாக சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர்  சானக தர்மவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நீதியை அடைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் […]

இலங்கை

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: பூசகருக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறை

  • January 18, 2024
  • 0 Comments

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கிளிநொச்சி பளைப் பகுதியில கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் தனக்கு உறவு முறையான பதினாறு வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றஞ்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேநபரான பூசகருக்கு […]