ஆப்பிரிக்கா

சூடானின் அபிபீயில் ஆயுததாரிகள் தாக்குதல் : பலர் படுகொலை!

  • January 29, 2024
  • 0 Comments

சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் எண்ணெய் வளம் மிக்க பகுதியான அபியீயில் உள்ள கிராமவாசிகள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதுடன்,  64 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில், நிலப்பிரச்சினை பிரதான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நுயர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய இளைஞர்களே மேற்படி தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. […]

ஐரோப்பா

ஹங்கேரி மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் இடையே சந்திப்பு

உக்ரேனிய வெளியுறவு மந்திரி, டிமிட்ரோ குலேபா, ஹங்கேரிய வெளியுறவு மந்திரி பீட்டர் சிஜ்ஜார்டோவை சந்திக்கவுள்ளார். டிசம்பரில் கெய்விற்கு 50 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றிய உதவியை ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஓர்பன் வீட்டோ செய்ததால் இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் இறுக்கமடைந்து. இந்நிலையில் ,உழ்ஹோரோட் (Uzhhorod ) நகரத்தில் பீட்டர் சிஜ்ஜார்டோ மற்றும் டிமிட்ரோ குலேபா இடையே ஆன் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையில் அடித்தளத்தை அமைக்கும் நோக்கம் கொண்டது.

இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் மீட்பு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் டிகோவிடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த 12-ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.  

இலங்கை

முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்ற பட்டத்திருவிழா!

  • January 29, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு கடற்கரையில் பட்டத்திருவிழா நேற்றையதினம் மாலை சிறப்புற இடம் பெற்றிருந்தது. வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர். குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். இதனை அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சுவிட்சர்லாந்தில் குதூகலமாக இருக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

  • January 29, 2024
  • 0 Comments

தெலுங்கில் ராம் சரனுடன் இணைந்து நடித்த மாவீரன் படத்தின்மூலம் புகழின் உச்சிக்கு சென்ற காஜல் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சத்யபாமா, ஹிந்தியில் உமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் 2022ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. […]

ஐரோப்பா

பின்லாந்து அதிபர் தேர்தலில் மத்திய-வலது கட்சி முன்னிலை

பின்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி, வலதுசாரி ஜனரஞ்சக வேட்பாளரை வீழ்த்தியுள்ளனர். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மத்திய-வலது தேசியக் கூட்டணிக் கட்சியின் ஸ்டப் 27.2% வாக்குகளையும், சுயேச்சையாகப் போட்டியிட்ட பசுமைக் கட்சியின் உறுப்பினரான தாராளவாத வேட்பாளர் ஹவிஸ்டோ 25.8% வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் இரண்டு இடங்களுக்கு பிப்ரவரி 11ஆம் தேதி இறுதிப் […]

ஐரோப்பா

உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப் போராக விரிவடையும் அபாயம் : ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப் போராக விரிவடையும் அபாயத்தைப் பற்றி ஜனாதிபதி விளாடிமீர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். நேட்டோ நாட்டை ரஷ்யா தாக்கினால், அது “மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக” இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் அவரது நாட்டிற்கான ஆதரவைப் பாதிக்குமா என்பது குறித்து, அமெரிக்காவின் கொள்கை ஒரு நபரைச் சார்ந்தது அல்ல என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் அரசு ஒளிபரப்பு ARD க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துளளார். இதன்போது […]

உலகம்

அமெரிக்க கடற்படையின் மிதக்கும் மொபைல் தளத்தை தாக்கிய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!

  • January 29, 2024
  • 0 Comments

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்க கடற்படையின் மொபைல் தளத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களின் கூற்றுக்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் கூற்றை நிராகரித்துள்ளனர். USS Lewis B. Puller என்ற கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான ஹூதி தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, புல்லர் முன்பு அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நவம்பர் முதல், கிளர்ச்சியாளர்கள் […]

இலங்கை

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வரும் இலங்கை : ராஜித்த வெளியிட்ட அறிவிப்பு!

  • January 29, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து தப்பிய நாடாக அடுத்த மாதம் அறிவிக்கும் என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்த நாடாக இலங்கை மாறப் போகிறது என்றார். சமகி ஜன பலவேக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், திவால் நிலையில் இருந்து மற்ற நாடுகள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆனதாகவும், அதில் பல அரசுகள் கவிழ்ந்ததாகவும் கூறினார். எவ்வாறாயினும் […]

பொழுதுபோக்கு

வயிற்றில் குழந்தையுடன் அமலாபால் செய்யும் வேலையை பாருங்க…

  • January 29, 2024
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். இயக்குனர் விஜய் உடனான திருமணம், அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலாபால். தனது காதலராக ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அமலாபால் தொடர்ச்சியாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் […]