ஐரோப்பா

பிரஞ்சு தெருக்களில் கார்களை நிறுத்துவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டுமா? வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது!

  • February 4, 2024
  • 0 Comments

பிரெஞ்சு தலைநகரின் தெருக்களில் SUV கார்களை நிறுத்துவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டுமா என்பது தொடர்பில் பாரிஸ் மக்கள் இன்று (04.02) வாக்களித்துள்ளனர். நகரத்திற்கு வெளியே உள்ள SUV ஓட்டுநர்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தும் திட்டத்திற்கு வாக்காளர்களின் ஆதரவை Hidalgo எதிர்பார்க்கின்றனர். சமூக ஊடகங்களில் வாக்களிக்க வெளியேறும் இடுகைகளில், குறுகிய பாரிசியன் தெருக்களில் SUV கள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன, அவை மிகவும் மாசுபடுத்துகின்றன, மேலும் “நம் ஆரோக்கியத்தையும் நமது கிரகத்தையும் அச்சுறுத்துகின்றன” மற்றும் […]

ஐரோப்பா

விரைவில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திடும் உக்ரைன்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் விரைவில் உக்ரைன் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக அறிவித்துளளது. இந்நிலையில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிப்ரவரியில் உக்ரைனுக்குச் செல்ல இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஒப்பந்தம் பிப்ரவரி 16 அன்று கையெழுத்திடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

திருகோணமலை-மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இன்மையால் அவதியுறும் விவசாயிகள்!

  • February 4, 2024
  • 0 Comments

திருகோணமலை-மொரவெவ பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை இன்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பெரும் போக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடன் பட்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போதிலும் நிர்ணய விலைக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கர் வயல் வெட்டுவதற்காக 15000/= ரூபாய் செலவு செய்ய வேண்டியதாகவும் ஒரு […]

இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சொத்துக்களை விற்பனை செய்யும் மக்கள்!

  • February 4, 2024
  • 0 Comments

கடந்த மூன்றாண்டுகளில் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சகம் மற்றும் ஸ்டேட் வங்கியின் பதிவுகளில் இருந்து தெரிகிறது. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள் சொத்துக்களை அடமானம் வைக்க அல்லது விற்க ஆசைப்படுகிறார்கள் என அந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் சில வீடுகளில் இருந்த நகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. பொருளாதாரச் […]

ஆசியா

இஸ்ரேல் தாக்குதலில் ஒரே இரவில் 92 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையேயான மோதலில் இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஃபா பகுதியில் நேற்று இரவு திடீரென நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களால் 92 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் பூங்காவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. போரில் இதுவரை 11,000-த்திற்கும் அதிகமான குழந்தைகள் எனக் உயிரிழந்துள்ளனர்.என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம். தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம் : ஐவர் கைது!

  • February 4, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல், கருத்து சுதந்திரத்தில் தலையிடும் சட்டங்களை இயற்றுதல், தீர்வு கிடைக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இளங்கே தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் திரு.எஸ்.ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சார்ள்ஸ் நிர்மலநாதன் […]

ஐரோப்பா

லண்டனில் உள்ள ஹீத்ரோ டெர்மினல் லவுஞ்சை புதுப்பிக்க திட்டமிடும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

  • February 4, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது லண்டன் ஹீத்ரோ டெர்மினல் 3 லவுஞ்சை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில்வர் கிரிஸ் லவுஞ்சை புதுப்பிக்க $4.4 மில்லியன் முதலீடு செய்கிறது. இது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், இருக்கை திறனை அதிகரிக்கவும் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்பிற்காக ஓய்வறை மூடப்பட்டிருக்கும் போது, தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் யுனைடெட் ஏர்லைன்ஸின் யுனைடெட் கிளப் லவுஞ்ச் அல்லது மற்ற ஸ்டார் அலையன்ஸ் ஓய்வறைகளை விமான நிலையத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்கா தவறிழைத்துவிட்டது : சிரியா மீதான தாக்குதல் குறித்து ஈராக் விசனம்!

  • February 4, 2024
  • 0 Comments

ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் ஒரு மூலோபாய தவறு என்று ஈரான் கூறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள 85 இலக்குகளை அமெரிக்கா தாக்கியது. ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்கள் அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதாக வெள்ளை மாளிகை கூறியது, அதில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், அந்த […]

பொழுதுபோக்கு

“தளபதி – 69” படத்தை இயக்குவது யார் தெரியுமா? கேம் ஸ்டார்ட்…

  • February 4, 2024
  • 0 Comments

தளபதி விஜய் தற்போது கமிட் செய்துள்ள GOAT படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தில் நடித்து முடித்துவிட்டு நடிப்பிலிருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே அவரது தளபதி 69 படத்தை யார் இயக்குவார்கள் என்று சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. முன்னதாக வெற்றி மாறன் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் […]

இலங்கை

மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற ஒருவர் மாயம்!

  • February 4, 2024
  • 0 Comments

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிந்தகல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று (03.02) நீராடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.