பொழுதுபோக்கு

அஸ்வினுக்கு வாழ்த்து கூறினார் நடிகர் தனுஷ்

  • February 15, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவிசந்திரன் அஸ்வின், இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 500 விக்கெட்டுகளை கடக்கவுள்ளார். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினர் முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “500 என்ற இலக்கை அடையுங்கள் அஸ்வின், ஓம் நமச்சிவாய” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நடேஷன் தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிப்பு!

  • February 15, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போரிஸ்  நடேஷனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் (15.02) அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இருப்பினும் அவருடைய மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மற்றொரு மேல்முறையீட்டை நீதிமன்றம் இன்னும் பரிசீலிக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் நடேஷ்டினின் வேட்புமனுவை ஆதரித்து மனுக்களில் […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: புடின் வெளியிட்ட பகிரங்க கருத்து

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாஸ்கோவிற்கு நல்லது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பை விட பிடனை நம்பகமான மாற்று என்று புடின் பாராட்டியுள்ளார். பிடென் மிகவும் அனுபவம் வாய்ந்த, கணிக்கக்கூடிய நபர். ஆனால், அமெரிக்க மக்களால் நம்பப்படும் அமெரிக்காவின் எந்தத் தலைவருடனும் நாங்கள் பணியாற்றுவோம், ”என்று புடின் ரோசியா 1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இருவரில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்டபோது கூறியுள்ளார். அவர் டொனால்ட் டிரம்பை விட […]

ஐரோப்பா

நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம்!

  • February 15, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்து அராசாங்கம் நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் 19 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள போர்கள் உட்பட உலகளாவிய உறுதியற்ற தன்மையின் அதிகரிப்புகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ செலவினங்களுக்கான நடுத்தர மற்றும் நீண்ட தூர கணிப்புகளை வகுத்த பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட், கடந்த 30 ஆண்டுகளில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, “இராணுவம் பலவீனமடைந்துள்ளது […]

பொழுதுபோக்கு

GOAT படத்தில் AI டெக்னாலஜியில் விஜயகாந்த் லுக் இதுவா..?

  • February 15, 2024
  • 0 Comments

விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மறைந்த விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளனர். ஏஐ டெக்னாலஜியில் விஜயகாந்தின் போர்ஷன் ஷூட் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ லுக் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜயகாந்த், அரசியலிலும் கெத்து காட்டி வந்தார். இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், […]

இலங்கை

இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பிப்பு!

வெளிநாடுகளில் பதுங்கியிருந்த இலங்கைக் குற்றவாளிகள் 42 பேருக்கு இன்டர்போல் ‘சிவப்பு நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளது என்று பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தேடப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும், தேடப்படும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர INTERPOL உதவி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை திறந்து […]

இந்தியா

கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!! குழந்தைகள் கண் முன் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்!

  • February 15, 2024
  • 0 Comments

குழந்தைகள் முன்னிலையில் மனைவியை தீ வைத்து கணவன் எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கான்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், கதம்பூர் தாலுகாவில் உள்ள ராய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பிரஜாபதி. இவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்னனர். இன்று அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராஜூவின் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த […]

ஆசியா

பாகிஸ்தானில் அரசியல் கட்சிகளிடையே மோதல்: 2 பேர் பலி; 14 பேர் படுகாயம்!

  • February 15, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இரு அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு தற்போதைய நிலவரப்படி, PPP கட்சி ஆதரவுடன் PML-N கட்சி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாக உள்ளார். இதேபோல், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான முன்னாள் […]

உலகம்

வடக்கு மாசிடோனியாவில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

வடக்கு மாசிடோனியாவில் அதிபர் தேர்தலை ஏப்ரல் 24ஆம் திகதியும், அதைத் தொடர்ந்து மே 8ஆம் திகதி பொதுத் தேர்தலையும் நடத்தும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற சபாநாயகர் ஜோவன் மிட்ரெஸ்கி, ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும், இரண்டாவது சுற்று மே 8 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் இணைந்திருக்கும் என்றும் ஒரு ஆணையில் கையெழுத்திட்டார். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் பாதையில் ஒரு ஜனநாயக நாட்டிற்கு […]

இலங்கை

ஹட்டனில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது!

  • February 15, 2024
  • 0 Comments

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக  சுமார் 5 வருடங்கள் கடமையாற்றியதாக  தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த செய்திகளுக்கு பதில் அளிக்காததால், […]